ஐந்து ஏழாகிப்
பின் ஒன்பதான படிகள்
முழுவதும் பொம்மைகள்!
குடும்பத்துடன் நிற்கும் ராமர்
ராசலீலையில் கிருஷ்ணர்
மழலைபொங்கும் முகத்தின்பின்
அனாவசியக் குடைதாங்கி நிற்கும்
வாமனன் நடுவான தசாவதாரம்
ராகவேந்திரர் புத்தர்
காமதேனு மஹாலக்ஷ்மி
என நீண்ட வரிசையின்
கடைசியில்
செட்டியாரும் மனைவியும்
காய்கறி பழங்களோடு
பலசரக்குக்கடை பரப்பி அமர்ந்திருக்க
எப்படி எல்லாமோ
மாற்றி அமைத்து
வைத்த கொலுவில்
முதலில் உட்கார்ந்திருக்கும் கணபதியோடு
பஞ்சகச்சமோ மடிசாரோ
கோட்சூட்டோ கவுனோ
எதைத் தைத்துப் போட்டாலும்
கூர்மூக்கின் கீழ்
செதுக்கி வைத்த
மாறாத புன்னகையோடு
விறைத்து நிற்கும்
ஐந்து தலைமுறை
மரப்பாச்சி தம்பதிகள்
போன முறை
நிஜப் பூனை தட்டிவிட்டு
இரண்டாய்ப் பிளந்து
மாண்டு போனதன்
நினைவு துரத்த
எடுப்பதில்லை இனியென்றானபின்
பரணே ஒற்றைப்படியாக
விஜயதசமியின் இரவில்
படுக்கவைத்த குவியலென
மரப்பெட்டிப் பிரமிடுக்குள்
கலைந்திருக்கும் பொம்மைகள்
முப்பொழுதும்
எலிகளோடு விளையாடும்
சத்தம் கேட்கும்
நவராத்திரிகளில்.
— ரமணி
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு
Ramani’s interesting description of golu dolls and his sentimental attachment with marapaachi dolls are narrated beautifully through மரப்பாச்சி இல்லாத கொலு kavidhai…aww enjoyable to read..
\
அன்பின் திரு.ரமணி அவர்களுக்கு,
ஒரு நிஜ விஷயத்தைக் கவிதையாக்கி சொல்லித் தந்த விதம் அருமை.
“பரணே …ஒற்றைப் படியாக..”
எலிகளோடு விளையாடும்…”
அருமையான சொல்லாடல்..
நன்றி
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Thank You Mr. Ganesan and Jayashree Madam for your appreciation.
ramani