சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம்
ஒரு போர்க்களம் !
பஞ்ச பாண்டவர்
பகடை ஆடுவர் சூதில்
பத்தினியைப் பணயம் வைத்து !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர் முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம்
ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !
பூரணச் சுதந்திரத்தில்
மதம் பிடித்த யானைகள்
மானிடரை மிதிக்கும் !
விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விதிகளுக்கு அடங்கிய
சுதந்திரம் !
உரிமை யில்லாத
சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா சுதந்திரம் ?
எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும்
பூரணச் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டி
போராடுகிறார்
போலிச் சாமியார்
புதிய பூமிக்கு !
+++++++++++
|  
 S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 7, 2012 (R-9)  | 
|||
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
 - பறக்காத பறவைகள்- சிறுகதை
 - சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
 - போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
 - இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
 - கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
 - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
 - வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
 - வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
 - அக்னிப்பிரவேசம்-20
 - மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
 - பள்ளியெழுச்சி
 - விற்பனைக்குப் பேய்
 - விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
 - ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
 - வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
 - பூரண சுதந்திரம் யாருக்கு ?
 - விதி
 - தாய்மை
 - கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
 - உண்மையே உன் நிறம் என்ன?
 - ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
 - குப்பை
 - கவிதை பக்கம்
 - ரயில் நிலைய அவதிகள்
 
