காவல் நாய்

This entry is part 1 of 31 in the series 31 மார்ச் 2013

நம்பி

 

 

மரத்தடியில்
இவன் செய்த தவம்
எதுவென்று இப்போது புரிகின்றது
சமீப தினங்களாய்
காரணம் ஏதுமில்லாமலேயே
அவனை பார்த்து
குரைக்கும் நாய்களின் ஊளையில்
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
அனுபவத்தின் போதாத தன்மை
உன் எல்லா நடத்தைகளிலும்
அடையாளம் காணமுடிகிறது.
உன் அவசரப் புத்தி
கன்னத்தில் அறை வாங்கும் ஆசை
பொதுமையாய் யோசி
எல்லா எவனும்
நல்லவனாய் இருக்க மாட்டான்
உன்னை கவனித்துக் கொண்டிருக்கும்
எவனோ ஒருவன்
வாள் கொண்டு
கை நிறைய அள்ளிப் பருக முடியும்
ரத்தப் பிரளயம்.

Series Navigationரேபீஸ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *