ஜென் ஊஞ்சல்
காலி ஊஞ்சல்
காற்றில் ஆடுகிறது
முன்னும் பின்னும்
சத்தமிடாதீர்கள்
அவன் கல்லறையிலாவது
நிம்மதியாக உறங்கட்டும்
ஆயுளில்
ஒரு முறையாவது
ஆணியில் அறையப்படுகிறோம்
விரிசலடைந்த சுவரில்
ஆணி இறங்குகிறது
கையை காயப்படுத்தி
கிளிஞ்சல்கள்
பொறுக்கும் முன்பு
கடலைப் பாருங்கள்
யாருமற்ற அறையில்
காற்று புரட்டுகிறது
புத்தகங்களின் பக்கங்களை
எப்படி
குடை பிடித்தாலும்
நிழல் நனைகிறது
கடக்க கடக்க
தொலைவு குறைகிறது
நடக்க நடக்க
கால்கள் நோகிறது
விழுதுகள் தானே
மரத்தினைத் தாங்குகிறது
நீல வானம்
சிற்றலைகள்
கடலோரத்தில்
கிளிஞ்சல்கள்
பொறுக்கும்
சிறுவர்கள்.
ஜென் மயில்
நள்ளிரவு
அடுக்களையில்
பாத்திரத்தை உருட்டும் பூனை
அந்தகார இருளில்
கொல்லை பொம்மையின்
வெள்ளை உடை
பளிச்சிடுகிறது
விடிந்ததும் தான் தெரிந்தது
கொல்லை பொம்மையின் மீது
மின்னல் விழுந்தது
இன்னொரு விடியல்
நேற்று பார்த்த
அதே வானம்
காலணி
சேற்றில் பதிய
எதிர்பார்க்காத
கோடை மழை
இலையுதிர் கால மாலை
தனித்திருப்பது
ஏக்கத்தைத் தருகிறது
அவளை எங்கே தேடுவது
அவள்
கூந்தலை அலங்கரிக்க
தவமிருந்ததா ரோஜா
இம்சிக்க வேண்டாம்
கவனமாய்க் கடந்து செல்லுங்கள்
விலங்குகள் பசித்தால் மட்டுமே
வேட்டையாடும்
அனுமதியின்றி
உனைத் தீண்ட
மழையாக இருந்திருக்க
வேண்டும்
திரும்பிப் பார்
நான் உன் நிழலுக்கு
குடை பிடிப்பதை
தேவாலயத்தில்
உன்னைப் பார்த்தேன்
உனக்கு கூட
வேண்டுதல் இருக்குமா?
ஜென் தோட்டம்
படுக்கை அறையில்
பொம்மை
கேட்பாரற்று கிடக்கிறது
பள்ளியைவிட்டு வரும்
குழந்தை
முதலில் தேடுவது
பொம்மையைத் தான்.
கனியை
சுவைக்கும் போதெல்லாம்
விதையின் ஞாபகம்.
மெல்லிய ஓசை
தூக்கத்தைக் கலைக்கும்
நங்கூரம் போட்டபடி
நிற்கும் நேரம்.
நத்தை கூட்டை
சுமப்பதைப் போல
சுமக்கிறேன்
அவளின் நினைவுகளை.
கொலுசு சப்தம்
கவனத்தைச் சிதறடிக்கும்
சலங்கை தேடுது
பார்வதியின் பாதத்தை.
உடைவாள்
யோசிக்காது
எத்தனை வீச்சுக்கு
உயிர் போகுமென்று.
ஒருமுறை இறந்தால்
புரிந்துவிடும்
மரண பயமும்
மாய உலகமும்.
உச்சி வெயில்
உலர்ந்த நாக்கு
எதற்கும் காசு.
ப.மதியழகன்
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை