பொழுது சாயும்
வேளை.
கறுப்புப் பூனை
பரபரப்பாயிருக்கும்.
காரணமில்லாமல் இருக்காது.
இருளின் துளியாய்த்
திரியும் அது.
இன்று
இருளைத் தூவித்
துரிதப்படுத்த
முடிவு செய்திருக்கும்.
கால் பதித்த இடங்கள்
கறுப்பு மச்சங்களென
கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும்
இழுத்துத் தாவியோட
இரவு முன் கூட்டியே
இறங்கியிருக்கும்.
பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின்
பால் முலையை உண்ணுவது போல்
மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும்
ஆல்மரத்தின் மேல் தாவும்.
மேகங்களை மண்டியிட வைக்கப் பார்க்கும்
மைதானம் சுற்றியிருக்கும் நகரின்
உயரடுக்கு வீடுகளை நோக்கும்.
பழுத்த நெருப்புப் பழங்களாய் மரத்தில்
பூனையின் கண்கள் ஒளிரக்
கிளை விட்டு
கிளை தாவும்.
நீளும் அதன் நிழல்
வீடு விட்டு
வீடு தாவி நுழையும்.
அங்கே
கனவு போல் இருள் யாவரின் முகமூடிகளைக்
கலைத்துப் போட்டிருக்கும்.
முகங்களில்லையா
எவருக்கும்?
எகிறிக் குதித்து
இருள் சுருண்டு உருளும் பந்தாய்
இருளிலோடும் கறுப்புப் பூனை வெருண்டு.
- ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
- ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
- நைஸ்
- எழுந்து நின்ற பிணம்
- உடலின் எதிர்ப்புச் சக்தி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
- ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
- மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
- உரையாடல் அரங்கு – 13
- மறுநாளை நினைக்காமல்….
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
- தலைகீழ் மாற்றம்
- ‘யுகம் யுகமாய் யுவன்’
- முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் – 23
- கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
- கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
- நீங்காத நினைவுகள் 16
- கறுப்புப் பூனை
- மருத்துவக் கட்டுரை மயக்கம்
- திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
- பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
- தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !