Posted in

ஒரு பரிணாமம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014
2014-06-28_10-46-32_211.jpg

 

காத்து காத்து
கல் மீது உட்கார்ந்தேன்.
எப்போது வருவாய்?
காலம் நீண்டது.
சுருண்டது.
நெளிந்தது வளைந்தது..
பாம்பை பார்த்தவனுக்கு
கயிறு கூட பாம்பு தான்.
பாம்பையே பார்த்தறியாதவனுக்கு
பாம்பை கயிறு என்று
கையில் எடுப்பான்.
நீ
எத்தனையோ முறை என்னிடம்
பேசியிருக்கிறாய்.
கண்களை வீசியிருக்கிறாய்.
அந்த ஒரு பார்வையில்
வந்த ஒரு சொல்
இப்போது வரை
காத்திருப்பு எனும்
மலைப்பாம்பாய்
என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அது
முறுக்கினாலும் இன்பம்.
திருக்கினாலும் இன்பம்.
நீ
விழுங்கும் வரை காத்திருப்பேன்.
===============================================ருத்ரா
அமெரிக்காவில் எல்.ஏ வில் ஸூ வில் ..
Series Navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *