அந்திமப் பொழுது

This entry is part 6 of 22 in the series 16 நவம்பர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​

அந்திமப் பொழுதென்கிறாய்
உன் முகம் கண்டு விடியும்
என் வாழ்வினைப் பார்த்து.
​​.

அன்பினால் வருடி
உயிரினால் பிரசவித்தாய்
காதல் பொழுதுகளை.
​​.

பார்க்காதிருந்தும்
பேசாதிருந்தும்
கூடாதிருந்தும்
நேசத்தின் வேர்
​வாடி யிருக்க வில்லை.
​.​

ஒரு வார்த்தையில்
துளிர்விட்ட கண்ணீரும்
நம் நேசத்தின் சாரலையே
உலகில் தூவிச் செல்கிறது
​.​

இப்பொழுது பேசு
காதலின் உயிரூட்டத்தை
ஊடலின் உயிரோட்டத்தை
அந்திம எண்ணத்தை தள்ளி வை.

உன்னோடு ஒருகால்
என் வாழ்வும் அத்தமிக்கக் கூடும்
நெடுநாள் வாழ்ந்திரு
என் நேசத்திற்காக

Series Navigationஆனந்த பவன் நாடகம்தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *