This entry is part 8 of 23 in the series 14 டிசம்பர் 2014

சேயோன் யாழ்வேந்தன்

 

ஜன்னல் கம்பிகளுக்கு

இருபுறமும்

நாம் நின்றிருந்தோம்

நீண்ட நேரம்

பின் திரும்பி

அவரவர் வழி சென்றோம்

வெகு தூரம்

கொஞ்சம் விலகி நின்று

பார்த்திருந்தால் அறிந்திருப்போம்

அந்த ஜன்னல் கம்பிகள்

சுவர்களில்லா காலவெளியில்

மிதப்பதை

Series Navigation     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !