பயணங்கள் முடிவதில்லை

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  கழிப்பறை வாடை கருதாமல்  பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி  நிற்கும்  பெயர் தெரியா இம்மரத்தையும்  என்ன செய்வது..... -உமாமோகன்
அப்பா எங்க மாமா

அப்பா எங்க மாமா

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த…
ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

  ஜெயகாந்தன்! தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும்,…

மூன்றாவது விழி

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது…
தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

  நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை…

பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

  தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து] சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில்…

செங்கண் விழியாவோ

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்[டு] எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற்…

மரம் வளர்த்தது

சேயோன் யாழ்வேந்தன்   விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் நான் தான் அதை வளர்த்தவன் என்ற கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன். ஒரு நாள் மெல்லிய குரலில் மரம் என்னிடம்…
கூட்டல் கழித்தல்

கூட்டல் கழித்தல்

ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2

என்.செல்வராஜ்   சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி…