பிசுபிசுப்பு

This entry is part 7 of 12 in the series 29 ஜனவரி 2017

அருணா சுப்ரமணியன்

நகரப்பேருந்தின்
நரகப்பயணத்தில்
நரன்களிடையே
நசுங்கி நீந்தி
கரை சேரும் கணத்தில்
எட்டிப்பிடித்த கைப்பிடியில்
எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு
உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ள..
எத்தனை முறை கழுவினாலும்
நுண்கிருமிகளை கொல்லும்
வழலையால் கூட
விரட்ட முடியவில்லை – அந்த
வழவழப்பின் அருவருப்பை….

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *