
(நவம்பர் 11, 2019)
மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே
(கனடா போர்த் தளபதி)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
போர்த் தளங்களில் அணி அணியாய்
பூத்துக் கிடக்கும்,
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
சிலுவை களுக்கு இடையே !
நெஞ்சை உலுக்கும் காட்சி !
மேலே பாடி பறக்கும் குயில்கள்
பயம் ஏதுவு மின்றி,
கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
கேட்டு குறையும் !
செத்துப் போனது நாங்கள் !
சில நாட்க ளுக்கு முன்பு பூமியில்
சீராய் வசித்தவர் நாங்கள் !
காலைப் பொழுதை உணர்ந்தோம் !
மாலைப் பொழுதில் மங்கிச்
செங்கதிர்
மறைவதைக் கண்டோம்.
நேசித்தோம்,
நேசிக்கப் பட்டோம் நாங்கள் !
இப்போது
போர்த்தளப் புழுதியில்
வீழ்ந்து கிடக்கிறோம் !
பகைவ ரோடெம் போரைத்
தொடர்வீர் !
தளரும் எமது கைகள்
தருவது
உமது கைக்கு
எரியும் தீப்பந் தங்கள் !
ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
இறந்தவர் நம்பிக்கை
நிறைவே றாது போனால் ,
உறக்கம் வாரா தெமக்கு ,
போர்த் தளம் யாவும்
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
செழித்துக் குலுங்கினும் !
++++++++++++++++
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்
- வள்ளுவர் வாய்மொழி _1
- துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]
- போர்ப் படைஞர் நினைவு நாள்
- முதுமை
- மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:
- 7. தோழி வற்புறுத்தபத்து
- சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “
- மழைப்பருவத் தொடக்கம்
- மந்தைவெளி மரணக்கிணறுகள்