Posted in

தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

This entry is part 1 of 13 in the series 10 அக்டோபர் 2021

சங்கமம்
 
(தமிழ்,மலையாள கவிதை சங்கமம்)
 
நாள்:15-10-21, வெள்ளிக்கிழமை
இடம்:ரோட்டரி கம்யூனிட்டி ஹால்,
ரோட்டரி கிளப் ஆப் தக்கலை,தக்கலை.
 
தக்கலை இலக்கிய வட்டம் நடத்தும் தமிழகத்தின்,கேரளத்தின் முக்கிய கவிஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கவிதை சங்கமம். தமிழிலிருந்து மலையாளத்துக்கும்,மலையாளத்திலிருந்து தமிழிலும் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும். நவீன தமிழ்,மலையாள கவிதை போக்குக்கள் பற்றி அலசப்படும்.தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பு செய்து நூலாக கொண்டு வரும் சாத்தியம் குறித்தும் விவாதிக்கப்படும்.
 
1)முன்பதிவு செய்யும்  ஐம்பது பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு
2)கலந்து கொள்பவர் நவீன கவிஞர்களாக இருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
3)கவிதை தொகுப்பு வெளியிட்ட கவிஞர்கள் கவிதை வாசிக்கலாம்.
4)பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
5)நபர் ஒன்றுக்கு ரூபாய் 250  என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6) முன்பதிவு செய்பவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தும் ஒப்புதலை அளிக்க வேண்டும்.
7)முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10.
8)தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கங்கள்: முஜீப் 9943871088,நட.சிவகுமார் 9843145004.
 
 
 
 
 
 
 
Series Navigationசாணி யுகம் மீளுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *