This entry is part 1 of 11 in the series 21 நவம்பர் 2021
சி. ஜெயபாரதன், கனடா
 
முடக்கு வாத நோய் வதைத்து
மடக்கும் போது,
நடக்க முடியாது கால்கள்
பின்னித்
தடுமாறும் போது,
படுக்கை மெத்தை முள்ளாய்
குத்தும் போது,
படுத்தவன் மீண்டும்
எழுந்து நிற்க இயலாத போது,
வாழ நினைத்த போதும்
வாழ முடியாத போது,
இறுதி இயலாமை
உறுதி.
தவிக்கும்
மனத்துக்குத் 
தெரிவது, மீளாத
ஒரே பாதை !
பயணத்தின் முடிவு
ஒன்றே !
 
====
Series Navigationபடைப்பும் பொறுப்பேற்பும்