ஆர் வத்ஸலா
அம்மாவாக மட்டும்
இல்லாமல்
அப்பாவாகவும் இருக்க வேண்டிய
கட்டாயத்தால்
அழும் குழந்தையை
அம்மாவிடம் விட்டு விட்டு
வேறு ஊருக்குப் போய்
முதுகு போர்த்தி
‘பின்’ குத்தி
விலகா சேலையின்
வெளியே
வேண்டுமென்றே
தொங்க விட்ட
அர்த்தம் தொலைத்த
ஐம்பது பைசா மஞ்சள் கயிற்றில் தொங்கிய
கால் பவுன் மூலமும்
கடுகடுத்த முகத்தின் மூலமும்
சக ஊழியர்களுக்கு
பத்தினித் தனத்தை
பறை சாற்றிக் கொண்டு
பணியில் முழு கவனம் செலுத்திக் கொண்டு
இல்லாத
மனோதிடத்தை இருப்பதாக
காண்பித்துக் கொண்டு
இருந்தாலும்
பேருந்து நெரிசலில்
ஏதோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு
எழும்
சுரீரென
அடிவயிற்றிலிருந்து
வலி
—–
- ஒளி மூலம்
- காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்
- கவிதா மண்டலத்தில் சித்தன்
- எது பிறழ்வு?
- மலையாள சினிமா
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
- ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3
- தொற்றெனும் பாவி
- விரிசல்
- வலி
- பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல்
- யாரே பெரியோர் ?
- பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
- மகாத்மா காந்தியின் மரணம்
- எக்ஸ் ஆக்ஸிஸ் 1990
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )
- முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition
- ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்
Really painful
What could be written as novel or short story is conveyed through a poem is really moving !
Thank you, chithra