This entry is part 2 of 17 in the series 27 நவம்பர் 2022

 

ருத்ரா

எனக்கு என்ன வேண்டும் என்று

எனக்குத்தெரியாது

என்று ஒரு மனிதன் 

எய்தும் நிலை 

கடவுள் நிலையா?

“ஆட்டிசம்”நிலையா?

இரண்டிலும் 

நினவு ஓர்மை முதலியன‌

கழன்று விட்ட நிலை தான்.

இதில் முதல் நிலைஞர் யார்?

இரண்டாம் நிலைஞர் யார்?

யாரானால் என்ன?

அவர்கள் இருக்கும் இடம்

ஒன்று கோயில் ஆக இருக்கும்.

இல்லாவிட்டால் 

குணப்படுத்த முடியாத நோய்களுக்கு 

மருத்துவம் தருவதாக முயற்சிகள்

மட்டும் நடந்து கொண்டே இருக்கும்

மருத்துவ மனையாக இருக்கும்.

மிருகம் தான்

வளர்ச்சியின் உயர்ந்த நிலையில்

மனிதன் ஆகிறான்.

இன்னும் இன்னும் உயர்ச்சி பெற்ற‌

மனிதன் யார்?

மீண்டும் அவன் மனிதனே.

மனிதன் இயல்பு 

வளர்ந்து கொண்டே இருப்பது.

மலர்ந்து கொண்டே இருப்பது.

மொத்தமாய் பில்லியன்கள் கணக்கில்

அவன் பெருகிக்கொண்டே இருந்தாலும்

அவன் 

மொத்த மனித இனத்தை

ஒரு நேயம் கொண்டு கோர்த்துக்கொள்கிறான்.

அந்த மனிதம் தான்

புரிந்து கொள்ளப்படவேண்டும்.

உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

இதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படாத வரை

இங்கு கடவுள்களின் குத்தாட்டமே தான்.

கண் கூசுகிறது

இந்த “லேசர்”வனங்களில்.

_____________________

Series Navigationகவிதைத் தொகுப்பு நூல்கள் 3பயத்தை உண்டாக்கு