Posted in

கடவுளின் வடிவம் யாது ?

This entry is part 7 of 11 in the series 19 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா

மனிதனுக்கு
செவிகள் இரண்டு,
கடவுளுக்கு
காதுகள் ஏது மில்லை.
மனிதனுக்கு
கண்கள் இரண்டு,
கடவுளுக்கு
கண்கள் ஏது மில்லை.
மனிதனுக்கு
சுவாசிக்க மூக்கும்
வாயும் உள்ளன.
கடவுளுக்கு
மூக்கு மில்லை,
பேச நாக்கு மில்லை.
மனிதனுக்கு
காலிரண்டு, கையிரண்டு.
எங்கும் நிறைந்த
கடவுளுக்கு
கை, கால்கள் எதற்கு ?
மனிதனுக்கு
உடல் உண்டு, உணவுண்டு.
கடவுளுக்கு
கால வெளியே உடம்பு.
மனிதனுக்கு
இருப்பது சிறுமூளை.
கடவுளுக்கு
உள்ளது பெருமூளை.
மனிதருக்கு
பல்வேறு முகமுண்டு ,
அடையாளம் காண்ப தற்கு.
கடவுள்
முகம் அற்றது.
பிறப்பும், இறப்பும்
சுழற்சியாய்
பெற்றது மனிதன்.
கடவுள்
பிறப்பு இறப்பு
அற்றது.
வயிற்றுக்குள் வளரும்
யானைக் குட்டி
தாயைக் காண முடியாது.
கடவுள்
உருவைக் காண்ப தற்கு
பிரபஞ்ச விளிம்யை
கடக்க வேண்டும்,
நர மனிதன் !

Series Navigationமாலை நேரத்து தேநீர்பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *