Posted in

அங்காடி வண்டி

This entry is part 1 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

அங்காடி வண்டியை

வீட்டுக்குத் தள்ளிவந்து

வீதியில் விட்டேன்

வெயிலில் மழையில்

பனியில் கிடந்தது

துரு தின்றது

குப்பைகள் கொண்டது

காலவீச்சில்

அதன் கால்கள் முறிந்தது

வண்டிக்கும்

வலியுண்டோ?

என்னால்தான் இக்கதி

தப்புதான் வண்டியே

மன்னிப்பாயா?

வண்டி சொன்னது

தொழுது வாழ்ந்தேன் இன்று

தொழுநோய் கொண்டேன்

சித்திரமாயிருந்தேன்

சிதைத்தாய்

என் சாபம் தொடரும்

தர்மம் தண்டிக்கும்

நீ தீயில் முகம் கழுவும்

தேதிக்குக் காத்திரு

அமீதாம்மாள்

Series Navigationகவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *