Posted inகவிதைகள்
முகராத வாசனையின் நோதல்
ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன். இக் கமகமத்தலைத்தான். இவர்கள் காதலென்கிறார்கள். நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன். இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com