நீ ஊட்டிய அமுதில்
என் நகங்களும் பசியாறின
உன் தாலாட்டில்
இமைகள் சுமையிறக்கின
உன் விரல் பிடித்து நடந்தேன்
விரல்கள் விழிகளாயின
உன் கோழிக் குஞ்சிகளை
சாயம் ஏற்றாமல்
மேயவிட்டதில்லை
மிரண்டன பருந்துகள்
பசலையும் அவரையும்
சொகுசாய்ப் படர்ந்தன
முளைவிடும்போதே
நீ விரித்த பந்தலில்
கத்தரிப் பூச்சிகள்
காணாமல் போயின
நீ தூவிய சாம்பலில்
வாடிக்கைக் காகங்கள்
கன்றோடு பசு
குஞ்சுகளோடு கோழிகள்
இவைகளோடு நானும்
பசியாறாமல் நீ
பசி உணர்ந்த தில்லை
அன்று அடைமழை
நம் கட்டைச் சுவரில்
ஒரு தண்ணிப் பாம்பு
நான் கம்பு தேடினேன்
நீ கைதட்டி விரட்டினாய்
பின் சொன்னாய்
என் வாழ்க்கைச் சக்கரத்தின்
கடையாணியாக அந்த
உன் கடைசி வார்த்தைகள்
இதோ
‘விரட்டிவிடு அல்லது
விலகிவிடு
எதையும் காயப்படுத்தாதே’
—————————————–
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை