இன்னும் புத்தர்சிலையாய்…

This entry is part 1 of 51 in the series 3 ஜூலை 2011

இதயத்தில் தாங்கினேன்
தோழியே
உனை..
இன்னும் தான்
பாடம் படிக்கிறேன்
நான்…

உன் மனம்
புண்பட்டதோ –
கண்ணீரைச் சுமக்கின்றேன்
தினமுந் தான்
நான்…!

உனக்குள்ளே வந்துவிட
கருவாகச்
சுருங்கினேன்…

என் சுவாசத்தில்
கருகினேன் –
காற்றிலே சாம்பலாய்
உனைத்தேடி
பறக்கிறேன்…

கற்பாறை போலவா
என் மனம்..?,
நீரலையாய் வந்து
அறைந்தாயே…

உனக்குள் நான்
உறங்குகிறேன்
இன்னும்
புத்தர் சிலையாய்…
உன் சுவாசமாவது
தாலாட்டும்…!!

ஜே.ஜுனைட்
Jjunaid

Series Navigationகுரூர மனச் சிந்தனையாளர்கள்
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *