மூன்றாமவர்

0 minutes, 1 second Read
This entry is part 33 of 51 in the series 3 ஜூலை 2011

புத்தி செய்திகள் படிக்கிறது
மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி..
எனது வரவேற்பு அறையில்.

நான் இருவரையும் பார்த்தபடி,
தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல

கண்கள் மூடினால் ஓய்கிறார்கள்
திறந்தால் மறுபடியும் கூச்சல்
ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !!

தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் –
இருவரையும் கவனிக்கும் என்னையும்
பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால்,
விருந்தே நடத்தி கொள்ளலாமென.

வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது
எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர்.

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்கறை
author

சித்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *