மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
விடுமுறை யாகப் பொழுது போக்க
விளித் தென்னை வரவேற்க நீ
அழைப்பு விடுத்தாய் !
அப்போது
வெகு தூரத்தில் நான் இருந்தேன்
எதையோ தேடிக் கொண்டு !
மறுபடி நான் கடற்கரைக்கு
வரும் போது
அத்தமனம் ஆனது குன்றின் உச்சியில் !
கதிரோன் கடைசி யாய்ப்
பொன்னிறச் செவ்வல்லிக் கொத்தை
கண்ணோக்குவான்.
மனத் தடுமாற் றத்தில்
எனக்குத் தெரிய வில்லையே
விடுமுறை எப்போது
முடிந்த தென்று !
இலையுதிர் காலத்தில் பூத்துக் குலுங்கும்
பாரிஜாத மலர்களை
நாரற்றுக் கோர்த்த பூமாலை
உன் தூது வார்த்தைகள்.
புலர்ந்த காலை இளம் பரிதியின்
பொன்சுடர்க் கதிர்களில்
புதைந்து போயின உன் மொழிகள் !
களைத்த என் கரங்களில்
மொட்டுகளை
சீவிடும் கூரிய குளிரடிப்பு
பட்டு விடும் !
மூடுபனி சூழ்ந்த வேலிக்குள்
முடங்கி விடும் மௌனத் தென்றல் !
மனத் தடுமாற் றத்தில்
எனக்குத் தெரிய வில்லையே
விடுமுறை எப்போது
முடிந்த தென்று !
+++++++++++++++++++++++++
பாட்டு : 288 தாகூர் தன் 66 ஆம் வயதில் [நவம்பர் 8, 1927] சாந்திநிகேதனத்தில் இருந்த போது எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 14, 2013
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
- அக்னிப்பிரவேசம்-34
- பின்னற்தூக்கு
- நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
- மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
- அவசரம்
- நீங்காத நினைவுகள் – 3
- அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
- திருப்புகழில் ராமாயணம்
- சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
- வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
- இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
- சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
- எசக்கியம்மன்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
- விளையாட்டு வாத்தியார் -2
- தேவலரி பூவாச காலம்
- சுவீகாரம்
- வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
- நாகராஜ சோழன் M.A.M.L.A.
- பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
- சூறாவளியின் பாடல்
- புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
- மதிப்பீடு
- ‘பாரதியைப் பயில…’
- முற்பகல் செய்யின்…….
- துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
- என்னால் எழுத முடியவில்லை
- விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி