நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014
வைகை அனிஷ்
அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். நாட்டுப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பரவியது ஒரு வகை. இன்று நாம் காணும் நகர்ப்புற விளையாட்டுகள் பெரும்பாலும் நாட்டுப்புற விளையாட்டுக்களில் கிடைக்கப்பெற்றிருந்தன. ஆண்கள் விளையாடும் கபடி, சதுரங்கம், நீச்சல் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில விளையாட்டுக்கள் நகர்ப்புறங்களில் இருந்து நாட்டுப்புறத்திற்கு பரவியது. கைப்பந்து, கிரிக்கெட் போன்றவை.இவற்றில் ஆண்பிள்ளை விளையாட்டு, பெண்பிள்ளைகள் விளையாட்டு என இரண்டு வகை உண்டு. மேலும் கோடை, மழை என ஒவ்வொரு பருவத்திற்கேற்றவாறும் இவ்வகை விளையாட்டுகள் அமைந்துள்ளன. அரசுப்பள்ளிகளில் இதற்கென்று ஒருதுறையும் உள்ளது. பி.டி.வாத்தியார் என அழைப்பார்கள். பி.இ.டி. பிரியட்டில் அனைத்து மாணவர்களும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்பப்படி விளையாடுவார்கள். இன்று கல்வி வியாபாரமாக்கப்பட்டதைத்தொடர்ந்து தங்கள் பள்ளிகள் கல்வியில் முதல் இடம் பெறவேண்டும் என்ற நோக்கில் விளையாட்டுத்துறை பெயரளவில் செயல்படுவது கண்கூடான உண்மை.
கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு.
ச+ விளையாட்டு
இவ்விளையாட்டில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக சமமாக பிரிந்து இரண்டு கட்சிகளாக அல்லது இரண்டு பிரிவுகளாக இருப்பார்கள். உட்கார்ந்திருப்பவர் ஒரு கட்சியும், ஓடுபவர்கள் மற்றொரு காட்சியாகவும் இருப்பார்கள். ஒரு பிரிவினர் கிழக்கு பக்கம் உட்கார்ந்திருந்தால் மற்றொரு பிரிவினர் மேற்குப்பக்கம் அமர்ந்திருப்பார். நிற்பவருள் ஒருவர் ஓட இன்னொருவர் தொடவேண்டும். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தால் கட்சியாருள் ஒருவரைச் ச+ என்று சொல்லி எழுப்புவார். எழுப்பப்பட்டவர் உடனே ஓடிப்போய் ஓடுகிறவரை தொட்டுவிட்டால், தொட்டவர் ஓடுகிறவராகவும், ஓடியவர் தொடுகிறவராகவும் மாறவேண்டும். ச+ என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்விளையாட்டிற்கு ஆறு அல்லது எட்டுப்பேர் குழுவாக விளையாடுவார்கள். இவ்விளையாட்டு தற்பொழுது முன்னேற்றம் அடைந்து கோகோ என்ற விளையாட்டாக மாறியது.
ஆடுபுலி ஆட்டம்
இந்த விளையாட்டு அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு மூளையைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி ஆட வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு மூன்று சிறுகற்களும் 15 புளியங்கொட்டைகளும் தேவைப்படுகிறது. ஆடுகளைக்கொண்டு புலியை நகர விடாமல் கட்டியும் விடுவார்கள். புலியால் ஆடுகள் வெட்டவும் படும். இவ்வாறு நாட்டுப்புற ஆண்கள் விளையாடும் இவ்விளையாட்டு தற்பொழுது சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டாக மமாறிவிட்டது.
நீச்சல் விளையாட்டு
தேனிப்பகுதியில் மழைக்காலங்களில் இவ்விளையாட்டு விளையாடுவார்கள். ஆறு, மதகு, கிணறு போன்ற பெரிய வாய்க்காலில் சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்வர். இதற்கு எண்ணிக்கை இல்லை. கரையில் ஒரு புறமிருந்து மறுகரையை தொடவேண்டும். முதலில் தொட்டவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு நீச்சலிடிக்கும்போது நீரில் மூச்சுவிடுவது எப்படி, நீரில் மூழ்காமல் எழுந்து நிற்பது ஆகியவை. இயற்கையாக நீச்சலடிப்பது வேறு. ஆனால் நீச்சலடிக்கும்போது சுவாசிப்பது கடினம். மூச்சுப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது. இதற்கு பயிற்சியாளர் சுரக்காய் குடுவை, டயருடைய டய+ப் போன்றவற்றை வயிற்றில் கட்டி பழக்கிவிடுவார்கள்.
கிட்டிப்புள்ளை
பரந்த மைதானத்தில் ஓரிடத்தில் இரண்டு கம்புகளை வைத்து விளையாடு விளையாட்டாகும். அதில் ஒரு கம்பு சிறியதாகவும், மற்றொன்று கம்பு பெரியதாகவும் இருக்கும். மைதானத்தில் ஓரிடத்தில் கிட்டியை வைக்க ஒரு கோட்டைக் கிறுவார்கள். அதன் மையத்தில் கொஞ்சம் கீழே செங்குத்தாக குழிவடிவில் ஒரு குறுக்குக்கோடு போட்டு இந்தக் குறுக்குக் கோட்டிலிருந்துதான் புள்ளைக் கீந்துவார்கள். அப்படி கீந்திய புள்ளை எதிர்ப்புறமாக இருப்பவர் கிட்டியை நோக்கி வீசுவார். புள்கிட்டியின் மேல் பட்டுவிட்டால் ஆட்டம் இழந்து விடுவதாகப் பொருள்படும். அப்படிப் படவில்லையென்றால் கிட்டியானவர் புள்ளைத் தட்டி எழுப்பி அடிப்பார். அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த அளவைக்கொண்டு ஸ்கோர் கணிப்பர். குழுவினர் அனைவரும் முடிந்துவிட்டால் எதிரணியினர் ஆடுவர். இதுவே கிட்டிப்புள் விளையாட்டாகும். இவை பரிணாம வளர்ச்சி அடைந்து கிரிக்கெட்டாக உருமாறியது. தற்பொழுது நாடுகளுக்கு இடையே போட்டியையும், வெறுப்பையும், பல நுகர்பொருட்களை விற்பனை செய்வதற்கும் மோசடிகள் நடைபெறுவதற்கும் உகந்த விளையாட்டு. இதனை பெர்னாட்சா பதினொரு முட்டாள் விளையாட பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார்.
இளவட்டக்கல்
ஒவ்வொரு ஊரிலும் கிராமங்களில் இளவட்டக்கல் என்ற கல் பந்தைப்போல் உருண்டையாக இருக்கும். திருமணம் முடிக்கின்ற வயதிற்கு வருகின்ற ஆண் அந்தக்கல்லை தூக்கி பின்புறம் எரிய வேண்டும். அப்போதுதான் அவனுடைய வீரத்தையும், உடல்திறனையும் வைத்து பெண் கொடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தற்பொழுது கெங்குவார்பட்டி பகுதியில் கேட்பாரான்றி இளவட்டக்கல் ஒன்று உள்ளது.
கோலிக்குண்டு
இரண்டு நபர்கள் சேர்ந்து இரண்டு கோலிக்குண்டை அடித்து விளையாடுவதும், ஈரமான மண்தரையில் ஒரு குழியை தோண்டி குண்டை விழவைக்கும் விளையாட்டு உள்ளது. அதே போல 10க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் சிறிய குண்டுகளைப்போட்டு பெரிய குண்டால் அடிப்பது ஒரு வகையான விளையாட்டு.
வளரி விளையாட்டு
வளரி அல்லது வளைதடி என அழைக்கப்படும் விளையாட்டு இந்திய சுதந்திரப்போராட்;டத்தில் மிக முக்கிய பங்கு வகுத்தது. இது ஓரிடத்தில் நின்று கொண்டே தொலை தூரத்தில் வருகின்ற எதிரிகளைத் தாக்குவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலேய அரசு இதனை கள்ளர் ஆயுதம் என அழைத்தனர்.
இவ்விளையாட்டு தற்பொழுது ஆஸ்திரேலியாவில் ப+மராங்குகளுக்கு ஒப்பானதாகும். இவ்வளைதடி பிறைவடிவிலனதாகத் தட்டையான அமைப்புடையது. கையால் பற்றுதவற்குரிய முனையிலிருந்து எதிரான முனை போகப் போக அகலமுடையதாக அமையும். கைப்பிடிக்கும் பகுதியின் முனையில் உருண்டையான குமிழ் போன்ற அமைப்பு இருக்கும். எறிவதில் பயிற்சி உள்ளவர்கள் இலேசான முனையை கையில் பிடித்து வேகம் கொடுப்பதற்காகச் சில முறை தோளுக்கு மேலே சுழற்றி விரைவுடன் இலக்குநோக்கி எறிந்திட அது எதிரியை தாக்கிக்கொன்று விட்டு எறிந்தவர் கைக்கருகே திரும்பி வந்துவிடும் அல்லது சிறிது தூரம்; முன்னோக்கி விழும்.
இவ்வகை வளைதடிகள் பெரும்பாலும் சேக்கரிய மரத்தினாலும், யானைத் தந்தங்களினாலும், இரும்பினாலும் செய்யப்படும் போர்காலங்கள் தவிர முயல் மற்றும் மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்கும் இதனை பயன்படுத்தியுள்ளனர்.
பாளையக்காரர்களின் இறுதி யுத்தத்தில் இக்கருவி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இறுதி யுத்தத்திற்குப் பின்பு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வளைதடிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக பாண்டியரைத் தோற்கடித்த ஆங்கிலத்தளபதி அக்னியு குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது சிவகெங்கை அரண்மனை அருங்காட்சியகத்தில் இரண்டு மரத்தாலான வளைதடிகள் மட்டுமே சுவடுகளாக உள்ளது.
சிலம்பு
இவ்விளையாட்டு தமிழரின் பாரம்பரிய வீரமிக்க விளையாட்டாகும். இது தனிநபர் விளையாடக்கூடியது. ஒரே ஒரு மூங்கில் கம்பு இருந்தால் போதும் எதிரியை ஓட ஓட விரட்டிவிடலாம்.
ஆள் உயர அளவிற்கு சுழற்றுவதற்கேற்றவகையில் கன அளவினையும் பெற்றிருக்கும். மூங்கில் கம்புகளால் ஆடக்கூடிய ஒரு வகை ஆட்டமே சிலம்ப ஆட்டம். இச்சிலம்ப ஆட்டத்திற்கு அடவுகளே மிகவும் இன்றியமையாதது. இதில் கம்பு வீசும் முறைகளுக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. முதலில் குருவணக்கம் தெரிவித்த பின்னரே இவ்விளையாட்டில் உள்ள பல்வேறு விந்தைகளையும் செய்து காண்பிப்பார்.
குருவணக்கம் தெரிவிக்கும் முறைக்குச் சலாவரிசை என்று அழைக்கப்படுகிறது. சலாம் என்ற அரபிச்சொல்லே அலா என வழங்குவதாக நம்ப படுகிறது.
சிலம்புக்கலையானது உடலை மட்டுமே பயன்படுத்தி விளையாடும் விளையாட்டாகும். இதனை கையால் அடிப்பது, வெட்டுவது, குத்துவது அதே போல காலால் அடிப்பது என பல நிலைகள் உள்ளது. செவிக்குத்து, விலாங்குவர்மம், வில்லூணிவர்மம், அத்திச்சுருக்கி, ச+ரியடங்கல் என ஐந்து வர்மத்திற்கான அடியாக வர்மக்கலைஞர்கள் கூறுகிறார்கள். தன்னை மட்டும் பலப்படுத்திக்கொள்ளும் பயிற்சிக்கு செவுடு என்கின்றனர். நிலச்செவுடு, ஒத்தைச்செவிடு, பிரிவுச்செவுடு, சீனாடிச்செவுடு, அங்கச் செவுடு என பல வகையில் உள்ளது. எதிரியிடமிருந்து காத்துக்கொள்ளுகின்ற விதமாக அமைகின்றது. அதாவது 64 செறுப்பு, 64 அறுப்பு, 64 வெட்டு, 64 இருப்பு என்று பிரித்துக்ளனர்.
கம்பு விளையாட்டில் சிரமம், நெடுங்கம்பு, விளையாட்டு என இரண்டுமுறை உள்ளது. நெற்றிமூட்டுக்கம்பு, என்பது அந்தக் கம்பின் உயரம் அதனைப் பயன்படுத்துகின்ற நபரின் நெற்றியின் கீழ்பகுதி வரையிலான உயரம் கொண்டதாக இருக்கும். எனவே அதனை நெற்றிமூட்டுக் கம்பு என்றும் கம்பைச் சுழற்றி தடுப்பதும், அடிப்பதுமான செயல்களை செய்யப்படுகின்றன. இதில் பனிரெண்டு நிலைகள் உள்ளது.கிருக்கி, உடான், படை, குத்து போன்ற பெயர்களால் கம்புவீசும் முறைகள் அழைக்கப்படுகின்றன. இவ்வகைப்பெயர்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். சிலம்பக் கலையில் திறனறி முறையினைத் தெரிவிக்க  ஒரு வீடு கட்டுதல், இருவீடு கட்டுதல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதனுடைய பரிணாம வளர்ச்சியாக கராத்தே, குங்ப+, சிட்டோரியா என பல பெயர்களில் அழைக்கபடுகிறது. இதில் கருப்பு பெல்ட், சிவப்பு பெல்ட், என தங்களுடைய திறனுக்கேற்ப பெயர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். கிராமப்புற மக்கள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பிறமக்களின் நடை, உடை, பாவனைகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர். விளையாட்டுக்கள் பெரும்பான்மையும் உடற்பயிற்சியோடு தொடர்புடையதாக உள்ளது. பொழுது போக்கு, மகிழ்ச்சி தருவதாகவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை அகற்றப்படுகிறது.
இவ்வாறு பாரம்பரிய மிக்க விளையாட்டுக்கள் புறந்தள்ளப்பட்டு தற்பொழுது மாணவர்களை சீரழிக்கும் வீடியோ கேம்ஸ், செல்போன், இண்டர்நெட் சென்டர், ஐ-பேட் என மாணவர்களின் மூளையையும் அறிவுத்திறனையும் இழந்து கண்கெட்டு சிறுவயதிலேயே கண்ணாடி போட்டும் தங்களுடைய வாழ்வை சீரழித்துக்கொண்டிருக்கின்றனர்.  மேலும் தமிழக அரசு சிலம்பக்கலை உள்பட பல கலைகளை மண்சார்ந்த கலைகளாக பார்க்கப்படுவதில்லை என்ற குறை கூறும் அவலமும் உள்ளது.அதே வேளையில் அண்டைமாநிலமான கேரளாவில் பாரம்பரியமிக்க விளையாட்டுக்களை பாதுகாக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நாமோ அன்னியமோகத்தால் பாரம்பரியத்தை இழந்த வருகிறோம்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *