This entry is part 9 of 14 in the series 19 நவம்பர் 2017

சிவசக்தி

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால்  அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரைஒதுக்கியது
மீண்டும் குதித்தேன்
சற்றுதூரம் கடந்தேன்
சிலரால் கரையில்
தள்ளப்பட்டேன்
இம்முறை
படகை வாடகை எடுத்தேன்
என் பயண அனுபவங்கள்
எவ்வளவு பெரிது?
கற்றுகொண்டேன்
வெகுதூரம் சென்றேன்..
கடல்  நண்பனான்
அவன் என்னிடம்
நண்பா!
ஆதவன் கண்கள்
முழுவதும் என்மேல்
இரவில் நிலவும் நானும்
பேசிக்கொள்வோம்!
என் கருவறைக்குள்
உயிர்களை பாதுகாத்து
கொடுக்கிறேன்
மானுடன்
என் கருவறையை
சிதைக்கிறானே நண்பா!!

 

சிலநேரம் கடுமையாக
பேசுவேன்
ஆழி பேரலைகள்
தாண்டவம்!
வாழிடம் வந்து சென்றேன்
வியப்பில் நீங்கள்..
சரி நண்பா
உன்பிரச்சனைக்கு
என்னிடம் வந்தாய்
ஆழத்தில் இருக்கும்
அமைதிக்கு வா..
முழுபொருளில்
அமைதி இருக்கும்.

உங்களை அலையால்

தொட நினைக்கிறேன்
சற்று தள்ளியே
உங்கள் பார்வை


அருகில் அமைதியை
தந்துவிட்டு அல்லவா
நண்பா செல்கிறேன்!

மீண்டும் கரையில்
நான்..

Series Navigationபிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு