யாளி

This entry is part 12 of 48 in the series 15 மே 2011

 தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம்

மெதுவாகச் சுழற்றும் போது

காணாமல் போகும்

முதல் சுவாசம்

இழுக்கும் சிசு

தாயின் அரவணைப்பில்

சுகம் காணும்

நகராமல் அமர்ந்திருந்தாலும்

பூமியின் பயணத்தில்

நாமும் ஒரு பிரயாணியே

நாள்தோறும்

சந்திரனின் தோற்றம்

வளர்வதையும், குறைவதையும்

கண்டு வியக்கும் குழந்தைகள்

சிறிய அலைகள்

முத்தமிட்டுச் செல்லும்

பெரிய அலைகள்

மணல் வீட்டை இடித்து

சுவடில்லாமல்

செய்துவிட்டுத் திரும்பும்

இரவு, பகல்களாய் ஆனது

வாழ்க்கை

கனவுகள் மட்டும்

இளைப்பாறுதல்

தரவில்லை என்றால்

கைதிகளாகிப்போவோம்

புவியெனும் சிறைச்சாலையில்.

Series Navigationஒரு பூவும் சில பூக்களும்என்ன வாசிப்பது
author

ப.மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *