கனவுகளின் பாதைகள்

This entry is part 15 of 39 in the series 4 டிசம்பர் 2011

மிதமிஞ்சி உண்டுவிட்டு
அடங்காத பசியில்
தன்னையும் சேர்த்தே
உண்டுவிடுகிறது அந்தக்
கரிய துளை…

உண்ட மயக்கத்தில்
கொண்ட உறக்கத்தில்
காணும் கனவுகளிலெல்லாம்
முக்காலமும் உணர்கிறது அது…

அக்கனவுகளுக்குள் பாதையிட‌
காத்திருக்கிறது சிலிக்கான்
சமூகம்…

Series Navigationபுதிதாய்ப் பிறத்தல்!சொக்கப்பனை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *