(ஓர் அறிவியல் மாணவன்) வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலினால் ஏற்படும் வேளாண்மையின் வீழ்ச்சி பற்றி அது பேசுகிறது. கட்டுரையின் தலைப்பு தமிழ் மொழி பெயர்ப்பில் “போருக்கு எதிரான உலகப் போர்” என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் என்னவாக இருந்திருக்கலாம் என யூகமாக மொழிபெயர்த்தால் […]
* 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் “ இரங்கம்மாள் விருது “ பெற்ற “ தமிழ் மகனின் படைப்புலகம் “ : ஆய்வரங்கம் பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு வருக… —————————————————————————————————————— *தமிழ் மகனின் நூல்கள்: 1.கவிதை […]
நேற்கொழு தாசன் இலை உதிர்த்திய காற்றில் பரவிக்கொண்டிருந்தது கிளையின் ஓலம், நுண்ணிய அந்த ஓசையால் உருகி வழியதொடங்கியது உணர்வுகள்…… வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும் எரிமலைகுழம்பாய். அடங்காதவொரு பசியுடன் உறங்கிய மனமிருகம் _அந்த பேரிரைச்சலால் வெகுண்டு உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை, நாக்கின் வறட்சி மீது படிந்த மனச்சாட்சியின் அதிர்வுகள் ஓய்ந்துபோக மறுத்து ஆரோகண சுதியடைந்தன…….. மௌன விரிதலொன்றினை உருவாக்கி இடம்மாறிக்கொண்டது ஓலம் …………. எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில் வௌவால் சிறகடிக்கும் ஓசை படரத்தொடங்கியது ————————– ஆக்கம் நேற்கொழு தாசன் வல்வை
அபூபக்கர் சித்திக்கி ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது. 1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து […]
கிரிஸ் ஸாம்பெலிஸ் அரபு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் புரட்சிகளின் பின்னணியில், சவுதி அரேபியாவில் வளரும் கலவரங்கள் பார்க்கப்படாமலேயே போய்விட்டன. அரசியல் பகிரங்கமாக்கப்பட்டுகொண்டிருக்கும் சுழ்நிலையில், வெகுகாலமாக இருந்துவரும் சர்வாதிகார ஆட்சிகளின் முன்னால் அரபு மக்கள் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், இதுவரை சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு, குறிவைத்து தாக்கப்பட்டுகொண்டிருந்த இன, மத சிறுபான்மையினர் தங்களது குரல்களையும் வெளிப்படுத்த இறங்கியுள்ளனர். 2011இலிருந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் (அல் மிண்டாக் அல் ஷார்கியா) ஷியா சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராட்டம் […]
சு.பிரசன்ன கிருஷ்ணன் இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் […]
நேற்கொழு தாசன் மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு….. ஆக்கம்; நேற்கொழு தாசன் வல்வை
வே.ம.அருச்சுணன் மலேசியா காலை மணி எட்டாவதற்கு முன்பே கவுன்சிலர் மணிவண்ணன் பூக்கடைக்கு வருகிறரர். “நான் இருபது வருசமா இங்கு வியாபாரம் செஞ்சிக்கிட்டு வர்றேன். இப்போ……திடீர்னு வந்து இடத்தைக் காலிப் பண்ணச் சொன்னா நான் எங்கே போவேன்?” பூக்கடை உரிமையாளர் பூங்கோதை அந்த வட்டாரத்தின் நகராண்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணனிடம் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “கேள்விப் பட்டுதான் வந்திருக்கிறேன் தைரியமாக இருங்கள் அம்மா!” கவின்சிலர் பதவியேற்று மூன்று மாதங்களே […]
காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் […]