author

வாழ்க நீ எம்மான் (2)

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர். 2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார். 3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும். 4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் […]

வாழ்க நீ எம்மான்.(1 )

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். 2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன். 3.இந்திரனுக்கும் லட்சுமணனுக்கும் ஒரே திறமையும் ஆற்றலும் இருக்க, இந்திரன் ஏன் தோற்றுப்போனான்? இந்திரனுக்கு அறம் துணைக்கு வரவில்லையே ஆகத்தான். 4.பூசாரிகளே மொத்த பேராசைக்கும் உபயதாரர்கள். 5.விசித்திர வார்த்தைகளுக்கு அலைவதும் அவற்றின் உச்சரிப்புகளைச் சொல்லியே காலம் கடத்துவதுமா கற்றவர் வாழ்க்கை. 6.1914 ஆம் ஆண்டு இந்தியாவில் காலராவும் பிளேக்கும் விழுங்கிய மனித உயிர்கள் 46,49,663 […]

‘காசிக்குத்தான்போனாலென்ன’

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

நான் காசிக்குப்புனித  யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு  என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் குடும்பங்கள் சகிதமாகத்தான். எனது குடும்பம்  அது போன தலைமுறை பொ¢ய க்குடும்பம்.   இரண்டு அண்ணன்கள் மூன்று அக்காக்கள்.எனக்கு ஒரு தங்கை எல்லாருக்கும் இளையவள். எங்கள் குடும்பத்தில்  போதுமப்பா இந்த  ப்பூவுலகவாழ்க்கை என்று இந்த ப்பூமியைக்காலிசெய்து விட்டு  அவள் எப்போதோ போய்ச் சேர்ந்தாள் .                             காசிக்குப்போகும்  இத்தனை  ஜனங்களோடு  ‘நான் மட்டும் விடுவேனா வந்துதான் தீருவேன்’ […]

பிரம்ம லிபி

This entry is part 1 of 29 in the series 12 ஜனவரி 2014

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. கபாலியின் மனைவி  தருமை நாதன் கோவிலுக்குச்சென்றிருப்பாள் இன்று சனிப் பிரதோஷம். . பரமசிவக்கடவுள் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்தமாய் நர்த்தனம்  செய்யும் புண்யகாலம் காலம்தான் அது என்று  விஷயம் தொ¢ந்தவர்கள் சொல்கிறார்களே. ஆகத்தான். கபாலியின்.மகள் அருணா வீட்டில்தானே இருக்கவேண்டும்.’எங்கே அவள்? அருணா என ஓங்கி அழைத்தான் கபாலி.பதில்  ஏதும் இல்லை. கொஞ்சம் குழப்பம். வாயில் […]

நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’

This entry is part 6 of 29 in the series 12 ஜனவரி 2014

  நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய்  அவிழும்  சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற  அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி   நீலமணி என்னும் படைப்பாளி  உச்சத்துக்குப்போய்  வாசகனுக்கு அனுபவமாவார். நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள்   ஒரு தொகுப்பாக ‘செகண்ட் தாட்ஸ்’ என்னும் பெயா¢ல் வெளிவந்திருப்பது நல்ல விஷயம். புதியதோர் நல் வரவு.நீலமணி தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல பதிப்பாளர் வெள்ளயாம்பட்டு சுந்தரம் ஒரு தூண்டுகோல்.வெள்ளயாம்பட்டு கவி நீலமணியை ச்சா¢யாகவே கணித்திருக்கிறார். தமிழ்ச்சூழலில் வாழும் வெளியீட்டாளர்கள் இடையே எளிமையும் […]

கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தோழியர் கே.வி காலமாகி விட்டார். நண்பர் ரகு என்னிடம் சொன்னார்.  சமுத்திர குப்பத்திலிருந்தும்  எனக்குச் செய்தி  சொன்னார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இப்படித்தான்  தோழர் தோழியரை  பெயருக்குப்பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வைத்து மட்டுமே  அழைத்தார்கள் இன்னும் அழைக்கிறார்கள். ஈ எம் எஸ், பி ஆர், எம் கே, ஆர் என் கே, எஸ் எஸ் டி ,ஒ பி ஜி, இப்படித்தான் தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள்.வி¡¢ந்து பறந்து  தேசம் தழுவிய இயக்கங்களில் இது எத்தனையோ சவுகர்யத்தை தரமுடியும். இப்போது  […]

மன்னிப்பு

This entry is part 5 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இந்த ஆண்டு டில்லித்தலைநகரில்குடியரசுதின கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வான கொடியேற்றும் தருணம். அங்கே கொடிவணக்கப்பாடல் பாடுவதற்கான குழு ஒன்றில் குரலிசைக்காகத்தான் அவள் தேர்வானாள். இந்தப்பெரு நாடே பாரதத்தாயுக்கு ச்செய்யும் ஆகப்பெரிய மரியாதையே இந்த கொடியேற்று விழா. ஆண்டுக்கு இருமுறை இது கம்பீரமாய் இந்த தேசத்தின் தலை நகரில் நிகழ்த்தப்படுகிறது .வெளி நாட்டுக்காரர்கள் அனேகம் வந்து மொத்த இந்தியாவை அளந்து விட்டு செல்வதற்கான நேரம் இது. பரந்து விரிந்து கிடக்கும் பாரதத்து புண்ணிய பூமி . பேசும் மொழிகள் எத்தனையோ. […]

விதி

This entry is part 21 of 28 in the series 27 ஜனவரி 2013

  ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன் . ராவணேசுவரன் என்கிற அந்த ஈசுவர பட்டம் பெற்று விட்ட இலங்கை அரசன். எப்போதும் உடல் முழுவதும் அவன் இட்டுகொள்வதோ பட்டை பட்டையாய் அணிசெய்யும் அந்த ஆலவாயான் திரு நீறு. நம சிவாய ஐந்தெழுத்துத் திருமந்திரத்தை அவன் நா ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தது. நான்கு வேதங்களில் அந்த சாமத்தை அவன் கரை கண்டவன் . சாம கானத்தை அவன் மெய்மறந்து வீணை கொண்டு மீட்டத்தொடங்கினான் வானுயர்ந்த அந்த இமய கிரி […]

எலி

This entry is part 8 of 30 in the series 20 ஜனவரி 2013

எலி எண்ணிக்கையில் ஒன்றுதான் வீட்டில் இருக்கிறதா இல்லை இரண்டு மூன்று என ஆகி அதற்குமேலுமா என்னால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. எலிகளின் அந்த மூத்திர நாற்றம் அது அது அவர்கள் அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். வயிற்றைப்பிசைந்து குமட்டிக்கொண்டு வருகிற விஷயம்தான். இது படிக்கும் இந்நேரம் என்ன என்னவோ செய்து உங்களுக்கும் கூட குமட்டிக்கொண்டு வரலாம். வரத்தான் செய்யும். அமெரிக்காவில் ஒருவனுக்கு கண்வலி என்று செல்போனில் பேசி நம்மிடம் சொன்னால் போதும் நமக்கும் இங்கு கண் […]

முகம்

This entry is part 11 of 32 in the series 13 ஜனவரி 2013

லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம். பத்தாம் தேதிதான் எப்போதும் அதற்குக் கடைசி நாள். இந்த மாதம் பார்த்து அது ஞாயிற்றுக்கிழமை அல்லவா வந்திருக்கிறது.ஆக கட்டணம் கட்டுவதற்குக் கடைசி நாள் அது தானாகவே அடுத்த நாள் அந்தத் திங்கள் கிழமை என்றுதானே கணக்காகும்.எந்த மாதமும் இப்படி கட்டணம் கட்டத்தாமதம் ஆனதில்லை. ஏனோ இந்த முறைதான் இப்படி த்தள்ளிகொண்டு போய்விட்டது.திங்கள் கிழமை காலை பள்ளிக்குக்கட்டணத்தை எடுத்து […]