author

ஆட்டம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான். கு.அழகர்சாமி

இலங்கை

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.   எப்படி அவர்கள் கொலை நிழலை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட முடியுமென்று நம்புகிறார்கள் ?   மண்ணிலிருந்து மீட்டெழும் அவன் எலும்புக் கூடு மானுடத்தின் சாட்சியாய்.   அது […]

அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

    நைந்து  போயிருக்கும் புத்தகம்.   அட்டைகள் இல்லை.   முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும்.   கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.   ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.   திரிக்கப்பட்ட சிறிய நூலொன்று புத்தக  அடையாளமாய் வைக்கப்பட்டிருக்கும்.   கடைசியாய் எந்தப் பக்கம் வாசிக்கப்பட்டிருக்குமென்று தெரியவில்லை.   புத்தகத்துக்குத் தெரியுமோ?   கவனமாய் புத்தகத்தைத் திறப்பேன் பழங்காலப் புதையல் போல.   எங்கே […]

இயக்கமும் மயக்கமும்

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

  (1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.   (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.   (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.   (4) இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும் மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து. (5) நீந்த நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.   (6) ஊரும் எறும்புகளில் […]

பெரிதே உலகம்

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிவிடப்பட்டு சாலைப் புழுதியில் விழுந்து கிடக்கும் குடிகாரன் மேல் பயணிகள் யாருக்கும் என்ன அக்கறையிருக்கும்? பரட்டைத் தலையும் கந்தையுமாய்த் தான் பாட்டுக்குத் திரியும் பைத்தியக்காரனை ’லத்தி’யில் துரத்தும் போலிஸ்காரனுக்கு என்ன நியாயமிருக்கும்? உலகில் எல்லா […]

கேட்ட மற்ற கேள்விகள்

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

    இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை.   கதவு தட்டப்படும்.   கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும்.   நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா?   அடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று வரவில்லையா?   எதிர் வீட்டு மாடியில் தனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று சதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா?   வாழ்வின் கவலைகள் இப்படித் தேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா? […]

குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும். எழுந்து விழும். கூட ஓடி ஓடி மைதானமும் களைத்துப் போய் ஒரு மூலையில் போய் உட்காரும். குழந்தைகளின் விளையாட்டு கலையும். குழந்தைகள் விட்டுப் போன விளையாட்டைக் கண்டு கலையாது வெளியில் தட்டான் பூச்சிகள் விளையாடும். கு.அழகர்சாமி

அன்பின் வழியது

This entry is part 14 of 32 in the series 15 டிசம்பர் 2013

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’ சொறி நாய். பசித் தீ தணியும். நின்று அன்பில் நோக்குவாள் ’என்பு தோல் போர்த்த’ பிச்சைக்காரி. நில்லாமல் இரயிலடியை அவசரமாய்க் கடந்து கொண்டேயிருக்கும் இரயிலொன்று ஏமாற்றமாயில்லை அவளுக்கு. கு.அழகர்சாமி

குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

This entry is part 9 of 26 in the series 8 டிசம்பர் 2013

  பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.   அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க.   குழந்தை முதல் நாள் விடாது அழும்.   இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும்.   மூன்றாம் நாள் மனதுக்குள்ளே கிணற்றுக்குள் அழும்.   இப்போதெல்லாம் குழந்தை அழுவதில்லையாம்.   குழந்தை ‘ஏ, பி, சி, டி’ யெல்லாம் சொல்லும்.   ‘டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார்’ என்று ’ரைம்ஸ்’ எல்லாம் […]

இலங்கை

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது.   தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது.   இழுத்துப் போய் எங்கோ மிதி மிதியென்று இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால் எப்படியிருக்குமென்று தெரியாது.   கைகளைப் பின்கட்டி கண்கள் வெறிக்க திறந்த மார்பின் முன் தொடும் கொலைத்துப்பாக்கி முன் தன் உயிர்க்குஞ்சு துடிதுடிப்பது எப்படியிருக்குமென்று தெரியாது.   உற்றார் உறவினரெல்லாம் சிதறிப் போக சொந்த மண்ணிலேயே […]