author

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5

This entry is part 12 of 39 in the series 18 டிசம்பர் 2011

வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள். 7. செண்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. சித்ராங்கியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இருக்கட்டுமே பரிதாபத்துக்குரியவர்களாக ஏழைகள் மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? சித்ராங்கிக்காக கோபுரவாசலிலும், கொடிக்கம்பத்தருகேயும், பிரகார வெளிகளிலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் பல ஜெகதீசன்கள் காத்திருக்கிறார்கள். இவளுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வல்லம்படுகையில் ஒர் அத்தை மகனிருக்கிறான். உற்சவகாலங்களில் வீட்டில் கற்பூர […]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4

This entry is part 13 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல அவனுடைய இனத்தோடும் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.”. 6. வெயில் சற்று மட்டுபட்டதுபோலிருந்தது. தலையிற் கட்டியிருந்த சவுக்கத்தை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான். மார்பைத் துடைக்க எத்தனித்தபோது முந்திரிப்பழம்போல வயிற்றில் புடைத்திருந்த தொப்புளைப்பார்க்கக்கூச்சமாக இருந்தது வெட்கப்பட்டான். இனி வெட்கப்பட்டு ஆவதென்னவென்று சமாதானமும் செய்துகொண்டான். தீட்சிதருக்குகூட அப்படியொரு தொப்புளுண்டு ஆனால் அவருக்கு தொப்புளான் என்ற பெயரில்லை. இவனுடைய […]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

This entry is part 8 of 39 in the series 4 டிசம்பர் 2011

“அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்.” 4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டியது. இரவு மின்னல் தாக்கியதில் நடராஜர் கோவில் மேற்கு கோபுரத்தில் கோபுர கலசம் சேதமடைந்து, யாழியும் ஒன்றிரண்டு பொம்மை சிற்பங்களும் உடைந்து விழுந்திருந்தன. பொது தீட்சிதர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். கோவிலுக்குள் பூசணிக்காய் உடைத்து பரிகார […]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2

This entry is part 14 of 37 in the series 27 நவம்பர் 2011

முதல் பாகம் – கிருஷ்ணபுரம் 1580-1620 ” இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் இதே இடத்தில் தான் வாழ்ந்ததற்கு தானே சாட்சியாக கிடக்கலாம். ஆர்ப்பாட்டங்களுடன் கதைசெய்யும் மனிதன்மட்டும் பிறர் ஊடாக தான் வாழ்ந்ததை நினைவூட்டவேண்டும். ” 3. இறையெடுத்த மிருகத்தைப்போல பாதிகண்களைமூடி இரவு மயக்கத்தில் மூழ்கியிருக்கக் கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது. நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் மரங்கள் அவ்வப்போது அசைந்து கொடுத்தன. மௌனமான அந்த அதிர்வை […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1

This entry is part 1 of 38 in the series 20 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா ——— வணக்கம் நண்பர்களே இரண்டுவருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நண்பரொருவர் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிடப்பேரவை பொதுசெயலாளர் திரு. நந்திவர்மன் என்ற நண்பரை அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின்போது எனது நீலக்கடல் நாவலை அவருக்கு அளித்தேன். அவர், தாம் ‘The New Indian Express’ க்கென எழுதிய கட்டுரைகளின் தொகுப்பொன்றை ( Tamil Civilization ) எனக்கு அளித்தார். பிரான்சுக்குத் திருப்பியதும் அக்கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தபொழுது அவற்றுள் The Grandeur of Senji port என்ற கட்டுரை எனது கவனத்தை பெற்றது. […]

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 2 of 41 in the series 13 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் […]

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 3 of 53 in the series 6 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா எதிர்பார்த்தைதைப்போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு […]

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 18 of 44 in the series 30 அக்டோபர் 2011

1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது. மார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த […]

கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 20 of 33 in the series 11 செப்டம்பர் 2011

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை இரண்டாவது: […]

கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 14 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார். போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் […]