narendran

காஷ்மீர் – அபிநந்தன்

This entry is part 6 of 8 in the series 3 மார்ச் 2019

காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள் இறந்ததாகச் சொன்னாலும் ஏறக்குறைய ஓராயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பாலகோடுதான் அத்தனை தீவிரவாதிகளுக்கும் பயிற்சியளிக்கும் கேந்திரமாக இருந்திருக்கிறது. அங்கிருந்த சென்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். காஷ்மீர் வெடிச் […]

கவிஞர் பிறைசூடன்

This entry is part 1 of 8 in the series 10 பெப்ருவரி 2019

கவிஞர் பிறைசூடன் என்கிற திரைப்பட பாடலாசிரியரை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் ஃப்ராடுகளைப் போற்றிப் புகழுகிற, தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிற தமிழர்கள் அவருக்குரிய மரியாதையை இதுவரை அளிக்கவில்லை. இளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்று உறுதியாகச் […]

இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு

This entry is part 1 of 5 in the series 16 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன். புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே. ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ. கட்சியின் இந்தத் தோல்வி சாதாரணமான ஒன்றல்ல என்பதே என்னுடைய கருத்து. எனவே அதனைக் குறித்து உள்ளது உள்ளபடி கொஞ்சம் ஆராயலாம். Shall we? First of all, it is a morale booster […]

பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி

This entry is part 4 of 5 in the series 9 டிசம்பர் 2018

பொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயன்று கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கவர்னர் பேடி நிர்வாகம் தெரிந்தவர். அதேசமயம் அரசாங்க அலுவலங்கள் பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே இயங்கவேண்டும் என்கிற நல்லெண்ணமுடைய அப்பாவிப் பெண்மணி. தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டான் என்று அவர் மனதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் விடாமுயற்சியை அவர் கைவிடுவதில்லை என்பதால் கிரண்பேடி மீது எனக்கு மரியாதை உண்டு. அரசு அலுவலகங்களுக்கு விசிட் செய்து அத்தைப்பாட்டி […]

முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

This entry is part 3 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். ‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் […]

சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு

This entry is part 4 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி பாட நூல்களை எவ்வாறு இந்திராகாந்தியும், கம்யூனிஸ்டுகளும் கெடுத்துச் சிதைத்தார்கள் என்பதனை மிக அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார் எஸ் எல் பைரப்பா. எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின் ஆட்சி அல்பாயுசில் முடிகிறது. அதற்குப் பின்னர் நடந்த தேர்தலில் இந்திராகாந்தி கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெறுகிறார். அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியக் கல்வித் திட்டங்களை அமைக்கும் உரிமையைக் கோருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். […]

நரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)

This entry is part 1 of 10 in the series 14 அக்டோபர் 2018

ராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாயிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “திருமாலிருஞ்சோலை” என்கிற பெயரில் ஒரு தலையணை சைஸ் புத்தகம் எழுதியிருக்கிறார். பலரும் அறியாத அற்புதமான வரலாற்றுத் தகவல்களுடன் தலபுராணத்தையும் கூறுகிற புத்தகம். அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தப் படம். எகிப்தின் பேரரசர் ஒருத்தர் நாமம் தரித்துக் கையில் சடாரி வைத்திருந்த வைஷ்ணவர் என்கிறார் ராஜாஜி. அதற்கான ஆதாரமாக பைபிளையும் ஆதாரமாகக் கொடுக்கிறார். இன்னொரு படத்திலிருக்கிற வைஷ்ணவர் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர் எனக்கூறி அதற்கும் புத்தக ஆதாரம் […]

நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )

This entry is part 3 of 9 in the series 7 அக்டோபர் 2018

சத்குரு ஜக்கி வாசுதேவ் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. இன்னமும் கல்லூரியில் படிக்கும் இந்திய இளையதலைமுறை மார்க்ஸிய மூளைச் சலவையிலிருந்து விடுபட இயலவில்லை என்பது பரிதாபம்தான். சத்குருவிடம் விவாதிக்கும் ஒவ்வொருத்தனிடமும் தெறிக்கும் வெறுப்பு மிகவும் கவலைக்குரியது. ஜக்கியின் ஆணித்தரமான பதில்களால் அவர்களின் […]

நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்

This entry is part 1 of 8 in the series 30 செப்டம்பர் 2018

ஒன்று — இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளைக் கூடச் செய்யவிடாமல் தடுக்கப்படுவது அவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். இதுவரை இந்தியாவை ஆண்ட அத்தனை அரசியல்கட்சிகளும் ‘வாக்குவங்கி’ அரசியலை மட்டுமே […]

முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

This entry is part 9 of 9 in the series 23 செப்டம்பர் 2018

தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக இருந்ததால் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது அவள் கோபம் கொண்டவளாக இருந்திருக்கலாம். இது வெறும் யூகம் மட்டுமே. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஷாஜஹானை மும்தாஜ் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். முகலாய […]