short story எஸ்.சங்கரநாராயணன் ••• ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு ஊழியர்கள் போல, அல்லது அதிகாரிகள் போல அவர்கள் தங்கள் வீட்டிலேயே நடமாடினார்கள். ••• கல்யாணம் ஆகி வெகுகாலம் கழித்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளை ஆண்பிள்ளை. பழனி வரை பாத யாத்திரை போய்ப் பெற்றெடுத்த பிள்ளை. தண்டாயுதபாணி என்றே குழந்தைக்குப் பெயர் வைத்தார்கள். தங்கள் வசதிக்கு மீறியே அவனை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். பெரிய பள்ளியில் நல்ல படிப்பு படிக்க வைத்தார்கள். இன்ஜினியரிங் வரை அவன் நன்றாகவும் படித்தான். […]
அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக இருக்கலாம். கல்யாணப் பெண்ணைவிட அமர்க்களமாய் அவர்கள் அலங்காரம். ஒருவேளை பார்க்கும் வழியில், ஒருவேளை ரயில் நிலையத்தில் கூட யாராவது அவளைப் பார்த்து காதல் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பும் மயக்கமுமான பெண்கள். சின்ன ஸ்டேஷன் துணிகள் […]
எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை உரக்க விவாதிப்பதுமாய் இருந்தான் அவன். படிக்கிற காலத்தில் இருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரன். முதல் இரண்டு இடங்களுக்குள் அவன் கட்டாயம் வருவான். இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் சரளமாய் வாசித்துத் தள்ளுவான். பொடிப்பொடி எழுத்துக்களை இரவின் சிறு வெளிச்சத்தில் படுக்கையில் படுத்தபடி வாசித்து வாசித்துத்தான் கல்லூரி முடிக்குமுன்னே சோடாபுட்டி கண்ணாடி போட வேண்டியதாகி […]
எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் உருவமாய் இருட்டுக் கொடுத்திருந்தது. மேற்கிலிருந்து ஜன்னல் வழியே உள்ளே, வெளிச்சத்தைக் காகிதம் போல நாலாய் ஐந்தாய்க் கிழித்துப் போட்டமாதிரி, தரையில் சிதறிக் கிடக்கும் வெளிச்சம். சில பூட்டிய வீடுகளில் தபால் இப்படி வீசிக் கிடக்கும். மணி என்ன? தூங்கியெழுந்ததில் உடம்பும் வாயும் நாறியது. மதியம் வரை அம்மா சோறாக்கவில்லை. கேட்க பயம். எதற்கெடுத்தாலும் அடிக்கிறாள். […]
எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல மூங்கில்தொட்டி வியாபாரிக்கும், சின்ன மூங்கில் குச்சிகள் கேட்டிருப்பார்கள். விலைக்கு வாங்கிப்போய் பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்தால் பாதி விலைக்கு கடையிலேயே எடுத்துக் கொள்வார்கள். நாலைந்து நாளாகவே ஊரில் ஒரு இறுக்கம் வந்திருந்தது. யாரோ இந்துக் கடவுளை […]
அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பாக்கி யிருந்தது. காலையில் வந்துகூட முடித்துக் கொள்ளலாம், என்றாலும் என்னவோ ஒரு யோசனை. முடிச்சி ஒழிச்சிட்டுத்தான் போகலாமே. என்றிருந்தது சிதம்பரத்துக்கு. தொட்டுத் தொட்டு வேலை அவனை இழுத்துக்கொண்டது. அடிக்கடி கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டான். நேரம் போகிற மாதிரியே இல்லை. ஆச்சர்யம். அத்தனை சுறுசுறுப்பாக, ஆவேசமாக வேலை செய்கிறோமா என்ன?… ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் பேனாவைப் போட்டுவிட்டு எழுந்து சோம்பல் முறித்தான். தலை நிமிர்ந்து பார்க்கவே தூக்கிவாரிப் […]
நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் – ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-) சிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின் சீரற்ற போக்கில் ஒரு லயத்தை ஒழுங்கை நியதிகளை, மனிதன் சமூகம் எனவும், பல்வேறாவகவும் கொண்டுவர முயல்கிறான். இதில் கலைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. வாழ்வினை ஈர்ப்புடன் கழிக்கவும் களிக்கவும் அவை கற்றுத் தர […]
(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் – ஜுன் 16, 2013.) அறிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். சற்று கூச்சத்துடனும் மேலான தயக்கத்துடனும் தான் நான் இங்கே உங்கள்முன் நிற்கிறேன். கவிதைகளின் நல்ல ரசிகனாக என்னை நான் சொல்லிக்கொள்ள இயலவில்லை. கவிஞர்கள் மீது எனக்கு பொறாமை உண்டு. நான் கவிஞன் அல்ல, என்கிற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். வாசிக்க என என் முதல்கட்டத் தேர்வு கவிதைகள் அல்ல. எழுதவும் […]
பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் (ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் கொள்ளலாம். கன்ட்டில் என்கிற இலக்கிய இதழில் பணியாற்றியபடியே எழுதியும் வந்தார். ஹிஸ்பேனிய மொழி இலக்கியப் பட்டதாரி. பல வருடங்களாக ஆசிரியப் பணி ஆற்றிவிட்டு 1985 முதல் தீவிர இலக்கியவாதி ஆனார். முதலில் கவிஞராகவே அவர் அறிமுகமும் பெயரும் பெற்றார்.) ஒவ்வொரு […]
(ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் கொள்ளலாம். கன்ட்டில் என்கிற இலக்கிய இதழில் பணியாற்றியபடியே எழுதியும் வந்தார். ஹிஸ்பேனிய மொழி இலக்கியப் பட்டதாரி. பல வருடங்களாக ஆசிரியப் பணி ஆற்றிவிட்டு 1985 முதல் தீவிர இலக்கியவாதி ஆனார். முதலில் கவிஞராகவே அவர் அறிமுகமும் பெயரும் பெற்றார்.) பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அவன் […]