invitation (4) Bharatheeya Itihasa Sankalana Samiti is organising an academic dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil on 6th January 2013. Eminent historians will discuss and debate on the concocted church story. The invitation is attached herewith. Kindly attend the programme.
Charitable registration 86107 1371 RR0001 14 December 2012 கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி […]
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இவ்வாரம் அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்ப முடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ( வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்- 40) . அடுத்தவாரம் தவறாமல் அனுப்பிவிடுவேன் சீதாலட்சுமி
(செய்தி: ரெ.கா.) மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர், விமர்சகர் மு.பொன்னம்பலம் வென்றார். அவருடைய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு அமெரிக்க டாலர் 10,000 பரிசாக வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மு.பொ.நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார். இதே நிகழ்வில் மலேசிய நூல்களுக்கான சிறப்புப் பரிசை […]
அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்.. வணக்கங்கள். நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் . ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…தோன்றியது…”இவரி டம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று. அதற்கும் ஒரு […]
ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு! +++ சங்கீத கலாநிதி டாக்டர் எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மாணவியும் சென்னை அரசினர் இசைக் கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியவரு மான திருமதி டி. எம். பிரபாவதியிடம் கர்நடக சங்கீதம் கற்றதோடு இசைக் கல்லூரியிலும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வாய்ப்பாட்டு சங்கீதம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர் பட்டயமும் பெற்ற திருமதி ஆர். சத்தியபாமா ஸ்கைப் […]
செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். […]
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30 70thprog 02 12 12