அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவையும் 16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது. இடம் L’ Espace Associatif des Doucettes rue du Tiers Pot 95140 Garges les Gonesse (à côté de l’hôtel de ville) அனைவரும் உறவுகளுடனும் நண்பா்களுடனும் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்கவும் அழைத்து மகிழும் கம்பன் […]
வணக்கம். அவசியம் கலை விழாவிற்கு வாங்க! மீ. த. பாண்டியன்
கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில […]
இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் […]
புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டால் எண் 488-ல் விற்பனையாகி வருகிறது. இச்சிறுகதைகள் இதழ்களில் வெளியானபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது […]
திருப்பூர் அரிமா விருதுகள் 2013 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 : முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் […]
நூல்கள் வெளியீட்டு விழா * திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு “ பனியன் நகரம்“ 2013 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல் 27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை: அரிமா கேபிகே செல்வராஜ் * முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி, சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன் சிறப்புரை: கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி, சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி, வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் […]
பேசாமொழி – வீடு சிறப்பிதழ்.. http://www.pesaamoli.com/ நண்பர்களே பேசாமொழி இதழ் இந்த மாதம் வீடு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த இதழ் முழுவதும் வீடு திரைப்படம் சார்ந்தக் கட்டுரைகள், மற்றும் பாலு மகேந்திராவின் மிக விரிவான நேர்காணலுடன் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அவசியம் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://www.pesaamoli.com/ இந்த இதழில்: வெங்கட் சாமிநாதன் அம்ஷன் குமார் தியோடர் பாஸ்கரன் ராஜன் குறை […]