போதலின் தனிமை : யாழன் ஆதி

This entry is part 12 of 35 in the series 11 மார்ச் 2012

தனிமைப்படுத்தப்படுகிறவர்களின் அனுபவப்பிரதிநிதியாக பிரியவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கவிஞர் யாழன் ஆதியின் நான்காவது கவிதைத்தொகுப்பு’போதலின் தனிமை’ கருப்புப்பிரதிகள் வெளியீடாக தோழர் நீலகண்டனின் அறிமுகத்துடன் துவங்குகிறது. துவக்கமே பறவையென இறக்கையை விரித்தெழுகிற அதிகாரவர்க்க சூரியனையும் எழுச்சியெனும் நிறம் பூசிக்கொள்ளும் உழைக்கும் வர்க்க வானத்தால் பதற்றமுற்று எஞ்சியுள்ள நிறத்தை தின்று பசியாற எத்தனிக்கும் அதன் முயற்சியையும் ஆழமாய் பதிவு செய்கிறார்.வலிக்காத வார்த்தைகளை தர முடியாத அவலத்தையும் கனறாத கங்குகளின் மீது நின்று எதிர்காலத்தை முன்னெடுத்துச்செல்லாத தடைக்கற்களை என் செய்யவென்று ஆதங்கப்படுகிறார்.அறைக்கூவலாய் […]

தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்

This entry is part 10 of 35 in the series 11 மார்ச் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தினை வீரயுக காலம் என்பர். அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்றும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் என்ற பெயர;களிலும் குறிப்பிடுவர். இச்சங்க இலக்கியங்களின் அடிநாதமாக விளங்குபவை காதலும் வீரமும் ஆகும். இந்தச் சங்க இலக்கியப் பாட்டுக்கள் மொத்தம் 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 473 பேராவர். 192 பாடல்களுக்குப் புலவர்களின் […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 34

This entry is part 7 of 35 in the series 11 மார்ச் 2012

“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம். ஓய்வுறு எடுத்துக் […]

ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்

This entry is part 6 of 35 in the series 11 மார்ச் 2012

பொன்.குமார் சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும்.புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் […]

அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்

This entry is part 2 of 35 in the series 11 மார்ச் 2012

ம.சந்திரசேகரன் உதவிப் பேராசிரியர் பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி தருமபுரி.05. மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை அகநானூற்று ஔவையார் பாடல்களில் இக்கட்டுரை ஆராய்கிறது. அகநானூற்றில் ஔவையார் பாடிய 11, 147, 273, 303 எனும் எண்கள் கொண்ட நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் பாலை திணைக்குரியதாகவும், தலைவி கூற்று […]

வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்

This entry is part 1 of 35 in the series 11 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து […]

மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்

This entry is part 42 of 45 in the series 4 மார்ச் 2012

கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்) மா. மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை. தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும். அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் […]

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.

This entry is part 32 of 45 in the series 4 மார்ச் 2012

— தமிழ்மணவாளன் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அண்மையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்னும் திரைப்படம் வெளியான போது, பரவலாக பலரது பாராட்டுகளையும், குறிப்பிடத்தக்க ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. வியாபார ரீதியிலான படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வித்தியாசமான அம்சங்களுடன் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’வியாபார ரீதியிலான அம்சங்களைக் கொண்ட படம் தானெனினும், அழுத்தமான கதையின் துணையோடு அதனை பூர்த்தி செய்திருந்தது எனலாம். படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு, பணிவாய்ப்பு மறுக்கப் […]

மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?

This entry is part 30 of 45 in the series 4 மார்ச் 2012

– டெனிஸ்கொலன் நாகரத்தினம் கிருஷ்ணா மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்) காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை […]

முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

This entry is part 22 of 45 in the series 4 மார்ச் 2012

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் […]