புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை ஒவ்வொருவர் எழுத்திலும் வெளியாகிறது. பூவரசி காலாண்டிதழ் அந்த மக்களின் புலம் பெயர்தலுக்குக்கும் பின்னான வாழ்வை, போருக்குப் பின்னான ஈழத்தைப் பேசுகிறது. ஈழவாணியின் பூவரசி புனைவும் நிஜமும் என்ற இணையம் நடத்தி வருகிறார். அது இப்போது […]
எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் உழலும் போது வரும் தற்காலிகச் சலிப்பே எஞ்சியதே ஒழிய ஆன்மீகத்தில் நிலைப்பது அதைத் தொடர்வது வசப் படவே இல்லை. ஜென் பற்றி ஒரு புரிதல் நிகழும் என்று வாசித்தால் அவர்கள் என் விரலைப் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாடு, வீடு என்று அனைத்தையும் ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் ஆகும். பொருள் ஆதாரத்தில் தான் நாடும், வீடும உலகமும் நிலை கொண்டுள்ளன. இப்பொருளாதாரத்திற்கு அடித்தளமாகத் திகழ்வதில் ஒன்று பணம். பணத்திற்கு காசு, நாணயம் என்று வேறுவேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இப்பணத்திற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. பணம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பண்டமாற்று வணிகமே நடந்துவந்தது. மக்கள் தங்களிடம் உள்ள […]
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்ப்பொருள் காண்பது அறிவு. .._ நீச்சல்குளம் அருகில் சென்றவள் உட்கார விரும்பவில்லை. சிறிது தூரமாவது நடக்க எண்ணினேன். நீச்சல் குளக் கூடாரத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றேன். பெரிய காடுபோல் உயர்ந்து வளர்ந்த மரங்கள் ! பச்சைக் கம்பளமாய்ப் புல்வெளி!. செம்பருத்திச் செடிகள் . அதன் பக்கத்திலேயே மல்லிகைப் பந்தல்! மல்லிகையின் மணம் மயக்கியது. இயற்கையின் எழில் எங்கும் கொட்டிக் கிடந்த்து. நடந்தது போதுமென குளத்திற்குத் திரும்பி ஓர் நாற்காலியில் […]
உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் […]
சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள் ஹெச்.ஜி.ரசூல் சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த இருநாள் கருத்தரங்கம்படைப்பாளிகளின் நாவல்கள்கவிதைகள் கதையுலகம் என ஒரு விரிவான பரப்பை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்தது. இது வெறும் ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாக மட்டும் இல்லாமல் ஒரு சுதந்திரமான உரையாடலுக்கான களமாகவும் அமைந்திருந்தது. இந்த பதிவுகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதல்ல. இக்கருத்துக்களோடும் படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த விமர்சனங்களோடும் கூட நாம் […]
புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்பு “நெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75. 75 கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின் அவலங்களைச் சுட்டி நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறது. இதன் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து இதைக் குறிஞ்சிப் பூக்கள் எனக் குறிப்பிட்டது தகுமே.. ஏனெனில் சமுதாய நோக்கோடு படைக்கப்படும் கவிதைகள் அரிதான காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு நம் […]
புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது. ஆனால் நமது காலத்தில் புதுக் கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பின்நவீனத்துவக் கவிதை என்றும் […]
சீதாலட்சுமி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ..- வாழ்வியலின் வழிகாட்டி —————————————————- எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை யொட்டி ஓர் முருங்கை மரம், தள்ளி ஓர் வேப்பமரம், சில காட்டுச் செடிகள். சுற்றி வந்த கண்களுக்கு அக்காட்சி நிறைவைக் கொடுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். காணி நிலம் வேண்டும். பத்து பதினைந்து தென்னை மரங்களாவது […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காலங்காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. துரோகம் செய்பவர்கள் துரோகிகள்என்று வராலாற்று அறிஞர்களால் அடையாளப்படுத்தபடுகின்றனர். மனித இனத்தில் மட்டுமே இத்துரோகம் என்பது மிக எளிதாக நிகழ்கின்றது. மனித இன வரலாறு தொடங்கியதிலிருந்தே இத்துரோகங்கள் நிகழ்ந்துள்ளன. இத்துரோகத்தை, ‘‘கூட இருந்தே குழிபறிப்பது என்றம், வஞ்சனை என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு நடந்து கொள்பவர்களை இறைவனும், சமுதாயமும், மனச் […]