நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பூ-நார், நகம்-சதை, அண்ணன்-தம்பி, நெருப்பு-புகை, என்பன போன்று பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும். மேற்கூறிய சொற்களைப் போன்றே பல்லும் சொல்லும் என்ற இரு சொற்களும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கைக்கு உரிய பல்வேறு கருத்துக்களையும் நமக்கு வழங்கியுள்ளனர். பல்லும்-சொல்லும் ஒரு மனிதனின் வாயில் பல் […]
Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை. The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா […]
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் […]
ஆங்கில நாவல்களில் காணக்கிடைக்கும் மெலிதான செக்ஸ் எனக்குப் பிடிக்கும். தமிழில் நான் படித்தவரை அது அறவே இல்லை என்று எனக்கொரு கருத்து இருந்தது. அதை மாற்றியவை சுஜாதாவின் கதைகள். அதற்கு முன்னாலெல்லாம் பி.டி.சாமி வர்ணனைகளில் ‘ அவளது மேலுதட்டில் லேசாக ரோமம் பூத்திருந்தது‘ என்ற அளவ்¢லேயே பெண்கள் இடம் பெற்றார்கள். சாண்டில்யன் கொஞ்சம் போல ‘ வழுவழுப்பான வெண்ணைப் பிரதேசம் ‘ என்பார். இதற்கே குமுதம் அவரைச் சுவீகரித்தது. புஷ்பா தங்கதுரை { ஆன்மீகத்துக்கு வேணுகோபாலன் } […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. எவ்வண்ணம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர். யாருக்கெல்லாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இறைவனை வணங்குதல், அரசன் சான்றோர் ஆகியோருக்கு வணக்கம் செய்தல், பெரியவர்களை வணங்குதல் ஆகிய வழிபாட்டுப் பண்பாடுகளை வகுத்துக் கூறியுள்ளனர். நெடுந்தொகை என்று வழங்கப்படும் அகநானூற்றில் வழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் […]
அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் “ஏறக்குறைய சொர்க்கம்” சொல்ல வருவது இதனை தான் குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக க்டையிலிருந்து கிடைக்க பெற்றேன். ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் […]
சிறகு இரவிச்சந்திரன் இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த படைப்பாளிகள் பங்கு பெற்ற கூட்டங்களாக இருந்தன என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். செட்டியார்களின் கொடையில் நடந்து வரும் அமைப்பு அது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏ வி எம் ராஜேஸ்வரி திருமணக்கூடத்தில் ஆண்டு விழா நடைபெறும். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைகள் பன்னிரெண்டு புத்தகமாகப் போடப்படும். பன்னிரெண்டில் […]
குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு 3டி எ•பெக்டுடன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலச்சந்தர் தத்தெடுத்தபின் தான் ஏற்றமே. மீனாவுக்கு ஒரு ரஜினிகாந்த், ஷாலினிக்கு ஒரு மணிரத்னம். ஆண்களைப் பொறுத்த வரை கமலஹாசனுக்கும் ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டார். சமகால நடிகர்களான தசரதன், […]
முல்லை அமுதன் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் […]