கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் வைத்தது வைத்தபடி அப்படி அப்படியே இருந்தது கலைத்துப் போட குழந்தையுமில்லை துவைத்துப் போட மனைவியுமில்லை அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தேன் தன்னைப் பற்றிச் சிந்திப்பது ஞானத்தை பரிசளிக்கும் ஆனால் ஊர் பைத்தியம் என பட்டம்கட்டிவிடும் வாசலில் பூனை கத்தியது இரவு உணவில் பங்கு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன் பலத்தைத் தவிர வேறில்லை” என விளம்பி ! என்னால் உனை மறக்க இயல வில்லை ! +++++++++ கைத் தாளம் போட்டுக் கானம் பாட வேண்டும் நான் ! நாகரிக மோடு பெண்ணை நாடிச் செல்லாது மதிப்புடன் வீட்டில் தனித்துக் கிடந்தேன் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட இனத்துக்கு இனிதானது. அதே சமயத்தில் செல்வந்தர் பணத்தைக் குவிப்பதில் நேரத்தை செலவழிப்பது, புழுக்கள் சமாதியில் புரளும் வாழ்க்கையை ஒத்தது. அப்படிச் செய்வது ஒரு பயத்தின் அடையாளம்” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் விரல்கள் இப்போது வெண் முகிலாகி பிரபஞ் சத்துள் புலப்பட […]
உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா (k_chithra@yahoo.com)
கோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு. வெண்ணை தின்னும் ஒபீஸ் கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில் கோபர்களும் கோபிகைகளும் கணினி மையங்களில் கருகும் கடலையில். கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன் நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்..
அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் தடவி தடாகங்களில் மிதந்து களித்தது. பழங்களையெல்லாம் மரத்திலிருந்து பறிக்காமல் சுவைத்தது. நிலவின் சுமையில் மலர்களில் இதழ்கள் உதிரவில்லை. மணங்களை மலர்கள் இழக்கவில்லை. நிலவு சுட்டப் பழங்கள் நிறம் மாறவில்லை. கோடி கோடி மைல்களென அன்றாடம் அலையும் நிலாவிற்கு அணுவளவும் களைப்பில்லை. குமரி எஸ். நீலகண்டன்
கடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் ! இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன் அதையே விதி என்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..
அமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கிழிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும் திரிக்கப்பட்ட நார்கள் கயிறாகி எதைக் கட்ட என்று கேட்கும் ஆயிரம் புத்தகங்கள் பேசாத மனித வாழ்க்கையை அரை முழம் கயிறு பேசுகிறது
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி வைக்கப்படுவதில்லை குந்திகளின் முக்கை அறுக்கும் பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம் கூட்டம் அதிகமாக இருந்தாலும் முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த கர்ணர்களை கண்டால் கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும் இறக்கி கையில் வைக்க சொன்னால் ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென […]
சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் விலகியும் உறவுகள் போலப் பாதைகள் கிளைக்க ஈர்த்துச் சென்ற சக்கரத் தடத்தில் காலமற்றுக் கிடக்கும் திருமோஹ¥ர்க் காற்றில் நாராயணம் கமழ்ந்தது. பரவசம் தணிந்து வாழ்க்கைப் புழுதியில் மீண்டும் உழன்று சுழன்றது பயணம். கைகுலுக்கிப் பா¢மாறின சிறு புன்னகைகளில் மனம் ஒட்டாது பிரியுமுன் காய்ந்தன புதிய அறிமுகங்கள். சேர்ந்தும் கலைந்தும் காற்று […]