தெய்வத்திருமகள்

This entry is part 19 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நான் வாழும் உலகத்துக்குள் மழையாய் நீ…. நீ வாழும் உலகத்துக்குள் மழலையாய் நான்…. வளர்ச்சி அற்று போனாலும் மகிழ்ச்சி உற்று போவேன் உன்னால்.. கள்ளம் இல்லை கபடம் இல்லை என் பாச முல்லை என் செல்ல பிள்ளை உன்னை தவிர எனக்கு யாருமில்லை என்னை விட்டு நீ பிரிந்தால் உடலைவிட்டு உயிர் பிரியும்…. உன்னை விட்டு நான் பிரிந்தால் உயிரை விட்டு உடல் பிரியும்…. நிலவோடு பேசுகையில் உன்னை கொஞ்சிய ஞாபகம்… உன்னோடு பேசுகையில் நிலவுக்கு கொஞ்சம் […]

வாசிக்கஇயலாதவர்களுக்கு

This entry is part 18 of 37 in the series 18 செப்டம்பர் 2011

இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ் செய்திகளை அன்றைக்கே வாசிக்க இயலாதவர்களுக்காக இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பின்னொரு நாளில் அவர்கள்அச்செய்தியை வாசிக்கநேரும் தருணம் மீண்டும் அவன் இறக்க வேண்டியிருந்ததது. ரவிஉதயன் raviuthayan@gmail.com

இதுவும் ஒரு சாபம்

This entry is part 17 of 37 in the series 18 செப்டம்பர் 2011

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை இந்த வாக்கு எந்திரகளுக்கு சிந்திக்கும் அறிவுமில்லை என்ற ஏளனத்தில் மிதந்தன. அடிமட்டத் தொண்டன் நான் அவையின் ஓர் மூலையில் கறிவேப்பிலையாய் கிடந்தேன் எதிகாலத் திட்டங்களை மனதிலும் குறைபாடுகளை மனுவிலும் வைத்துத் தவித்தபடி தேர்தல் சீட்டுக் […]

பிரபஞ்ச ரகசியம்

This entry is part 16 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த ரகசியம் . இதன் முறையே பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளை உணர்வதற்குள் ஒவ்வொரு செயலின் அறியாமை கடந்து விடுகிறது . பிரபஞ்ச எண்ணங்கள் அனைத்துமே உனதாக்கினேன் அதுவே அகமகிழ்வு என்றே வளர்ந்தேன் உணர்ந்த பின் உன்னில் […]

காலம் கடந்தவை

This entry is part 13 of 37 in the series 18 செப்டம்பர் 2011

பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை…. பின்பு ஒரு நாளில் சொல்லி விடலாம் என்று முன்பு ஒரு நாளில் தோன்றிய காதலை காலம் கடந்து காத்து வருகிறது என் இதயம் …. ச. மணி ராமலிங்கம் (smrngl@gmail.com)

ஒரு கடலோடியின் வாழ்வு

This entry is part 12 of 37 in the series 18 செப்டம்பர் 2011

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள்  உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு  வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்…  கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் … அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் … எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு?  கர்விக்கும் மனம்…  மறுநொடி சென்றமரும்  மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .… கண்கள் இங்கும் மனமங்குமாய்   விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும் நாளை மீண்டுமோர் விடியல்..  

தேடல்

This entry is part 11 of 37 in the series 18 செப்டம்பர் 2011

             –  பத்மநாபபுரம் அரவிந்தன் – பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில்  தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து கசிந்துருகும் காதல் …   என்  காய்த்த கைதனில் பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை… சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள் வானோக்கி எம்ப எத்தனிக்கும் … விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள்  அவள் மேல் வீசும் சோழ தேசத்து பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்.… மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும் அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு மனக் கண்ணில் மறையாது எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல மகளின் மேல் நகரும் காலம் தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் … கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள் சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல முத்தங்கள் வாங்கவேண்டும் ….  

அடைமழை!

This entry is part 10 of 37 in the series 18 செப்டம்பர் 2011

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்…!   பூக்கடைப் பெண்மணி உரக்கக் கூவினாள் ‘நான்கு முழம் பத்து ரூபா… நான்கு முழம் பத்து ரூபா…’ என்று!   கடந்து போகயிலே அவள் முகம் பார்த்தேன் கூவியபடியே அவள் கண்கலிளிருந்து மீண்டும் வலுத்தது அடைமழை…!!

சமனில்லாத வாழ்க்கை

This entry is part 4 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை   என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை   …..   வலியின் அலைகற்றை சுமந்து வந்த  என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை பின்தொடர்கிறவர்களை பொருட்படுத்தாமல்….   என்னிடம் ஏங்கி தவிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தபடி , யாரோ சிலரின் தாழிடப்பட்ட கதவுகளின் வெளியமர்ந்து யாசிக்கிறேன் , பிச்சையாய் பெற அவர்களிடம் ஏதுமில்லை  என தெரிந்திருந்தும் …   நிரம்ப  […]

இரண்டு கூட்டங்கள்

This entry is part 3 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  வாழ்த்த ஒரு கூட்டம் தூற்ற ஒரு கூட்டமின்றி வாழ்க்கையே இல்லை   அவன் நெருப்பில் எழுதி நீரில் பொட்டு வைப்பான் நுனி நாக்கசைவில் நோபல் வெல்வான் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் புன்னகை வீச்சில் வெளிச்சமாகும் இரவு தெறிக்கும் ஒரு சொல்லில் எரியும் கடல்வெளி அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் பெயரோ கால்வரி பட்டங்களோ மூன்று வரிகள் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   வரிகளற்ற பட்ஜெட் சாத்தியம் அவனின் […]