ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி வைக்கப்படுவதில்லை குந்திகளின் முக்கை அறுக்கும் பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம் கூட்டம் அதிகமாக இருந்தாலும் முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த கர்ணர்களை கண்டால் கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும் இறக்கி கையில் வைக்க சொன்னால் ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென […]
சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் விலகியும் உறவுகள் போலப் பாதைகள் கிளைக்க ஈர்த்துச் சென்ற சக்கரத் தடத்தில் காலமற்றுக் கிடக்கும் திருமோஹ¥ர்க் காற்றில் நாராயணம் கமழ்ந்தது. பரவசம் தணிந்து வாழ்க்கைப் புழுதியில் மீண்டும் உழன்று சுழன்றது பயணம். கைகுலுக்கிப் பா¢மாறின சிறு புன்னகைகளில் மனம் ஒட்டாது பிரியுமுன் காய்ந்தன புதிய அறிமுகங்கள். சேர்ந்தும் கலைந்தும் காற்று […]
ஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக கோர்க்கப்படுகிறது மாலை சூட. நெருங்குதலில் தயக்கம் கூடுகிறது தவிப்புகள் அனைத்தும் மவுனமாகியது நம்மின் புரிதலில் . என்று ஆட்கொண்டேன் உன் சுகமானநினைவுகளை . நினைத்து பார்கையில் பல நிலைகளில் உன் பாதிப்புகளின் மிச்சம் எராளமாக நிறைந்துள்ளது . நான் அதை அகற்றமுற்படும் […]
தொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான் இருந்ததாகத் தோன்றியது வேறொன்றுடையதாகவும் இருந்திருக்கலாம். என்னுடைய உணர்வில் அது என்னுடையதாக மட்டும்.,,.. அதனுடைய் உணர்வில் எப்படி என அறியமுடியவில்லை வைத்திருந்த தடம் உறுத்துகிறது அவ்வப்போது. விட்டுவிட்ட தடமும். ஜந்துவும் ஜடமுமாய் இல்லாமல் அது முழு ஜீவனோடிருந்தது. தொலைக்காமல் இருந்திருந்தால் தேடும் கஷ்டமும் இருந்திருகாது. மோகம் அழியவும்., விரக்தி தொலையவும். ஞானம் […]
இப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து இருக்கவும் வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை நல்வழியில் செலுத்த எந்தக் கறை படியாத கரம் நீளுமோ என்று தவித்திருந்த நமக்கெல்லாம் காலதேவன் நேரம் பார்த்து அறிமுகம் செய்கிறான் அஹிம்சை வழியில் தர்மம் காக்கப்படும் என்று அருள் பாலிக்கிறான். அவர் நாடாள்பவர்களுக்கு இடைமறிக்கும் நந்தியாய் தோன்றினாலும் சமூகத்தின் நற்கதிக்கு வழிகாட்டும் ரூபமகிறார் இன்னொரு காந்தியாய் […]
சருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை அவிழ்கிறது நெருப்புக் கங்குடன் புகையும் அக் கூட்டை கைகளில் ஏந்தி எடுக்கிறான் அக்னி குஞ்சொன்றை அன்று தான் கண்டேன். ரவிஉதயன்
எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும், என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும், என் கண்களில் ஈரம் குறையும் போதும், என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு சிறிதும் அக்கறையில்லாத போதும், எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன் ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும், தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை சட்டென மறையும் போதும், என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த மழைக்குருவி […]
அது ஒரு கனவுப்பொழுது இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம் படர் கொடியின் நுனி பிடித்து ஊஞ்சலிட்ட பருவம் கனவுகளடர்ந்த விடியற்காலைப்பொழுதுகளில் விரலிடுக்குகளிலிருந்து வழிந்து புள்ளிகளால் நீட்சியுறும் கோலம்… கோலப்பொடியாய் நானிருந்த தருணம் சலனமற்ற நீரோடையில் வீழ்ந்த கல்லாய் அலை கழிந்த நேரம் மிதிவண்டியின் மிதியடிகள் எனை நிந்தித்த வேளையில் கனவுலகில் விடியலை துரத்திய பொழுதுகள் வெய்யிலில் குடை நனைத்து ஈரமாய் உலவின காலம் கொப்புளங்கள் செருப்பணிந்து தேய்ந்து இரணமான கணங்கள் எல்லா வலிகளும் அற்றுப்போனதாய் நான் உணர்ந்த […]
என் இரவுகளும் உன் இரவுகளும் நம் காதல் கனவுகள் சொல்லியே கரைகின்றன… கை கூப்பி காதல் சொல்ல நான் தயார் நீ என்னுடைய காதல் கடவுள் என்பதால்… நீண்ட இரவுகள் சில நேரம் கொடியது.. உன் கனவுகள் இல்லாமல் என் இமைகள் வறண்டு விடுவதால்… மார்கழி குளிரும் சில நேரம் காதல் கனவுகள் சொல்கிறது இருக்கமாய் போத்தி கொள்ளும் என் போர்வை நீ ஆகி போவதால் — ராசை நேத்திரன்
குறைந்தது வாரத்திற்கு இரண்டு இலக்கியக்கூட்டங்கள் சின்ன அறையில் எண்ணிக்கைக் குறைவில் வருகையாளர்கள் அவர்களில் அதிகம் எழுத்தாளர்கள் எழுத்தும் வாசிப்பும் தவம் பெரிய அரங்கில் அதிக அளவில் வருகையாளர்கள் சிற்றுண்டி விரும்பிகள் அதிகம் சுட்டுதலும் சுருங்கக்கூறுதலும் குறைவு பெரிய அரங்கில் வழிபாடும் துதிபாடுதலும் அதிகம் அது முகம்காண வந்தக்கூட்டம் வந்து திரும்புவது அதன் வாடிக்கை சிற்றரங்கில் வசைபாடுதலும் கிண்டலும் கேளியும் அதிகம் உட்காருவதில் ஒரு ஒழுங்கில்லை அங்கே எல்லாரிடத்திலும் வெளிப்படுகிறது கோபம் அவர்களின் கோபத்தில் யாரும் தப்புவதில்லை […]