என் பாதையில் இல்லாத பயணம்

This entry is part 1 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். ‘ஒருதலை ராகத்’தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம் புரண்டு போயிற்று. அப்பாவின் ‘புதிதான’ பழைய சட்டைகள் அணிந்தே பழகிப் போனதில் நான் நானாகவுமின்றி அப்பாவாகவும் இல்லாது போயிற்று வாழ்க்கைப் பயணமும். __ ரமணி

பிரசவ அறை

This entry is part 33 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நீ பிறந்து விட்டாய் கேட்டதும் சில்லென்ற உணர்வு.. உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே அரை அங்குல புன்சிரிப்பு மட்டும் கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும் பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்.. எப்போது என தெரியாமல் வெடிக்கின்றன குண்டுகள்.. முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்… உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது – தலையனை தரும் ஆறுதலை கூட சிற் சமயங்களில் .. என்ற போதும் ஏதோ ஒர் மூலையில் மிக அகண்டு,மிக அகண்டு – வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை […]

காலம்

This entry is part 32 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று . சுய அங்கீகாரம் அச்சில் பெறுவதில் இல்லை என்பதை உணர செய்கின்ற காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை . காலங்கள் இணைத்துள்ள என்னை பெருவெளி மட்டுமே அறியக்கூடிய சுயத்தை பெற்றிருக்கிறேன் . வளத்தூர் தி.ராஜேஷ் .

கூடு

This entry is part 30 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை மூக்கு இன்னும் வளரவில்லை அதற்கு உணவூட்ட துடித்த தாயின் அன்பை அனுபவத்தை, ஆசையை எந்த கடவுள் கற்றுகொடுத்தான்? முத்துசுரேஷ்

சகிப்பு

This entry is part 29 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் இல்லாவிட்டால் உலகில் எந்த ஒரு வேலையும் நடக்கதென நினைப்பதுண்டு கொளுத்தும் வெயிலையும் படுத்தி எடுக்கும் வெக்கையையும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை பெரும்பாலான நேரங்கள் இல்லாத மழைக்கான ஏக்கத்திலேயே கழிந்து கொண்டிருந்தது எப்போது விதைப்பது எப்போது வளர்வது எப்போது அறுவடை செய்வது அதற்கெல்லாம் மழை எப்போதெனும் எதிர்பார்ப்பு ஓங்கியிருந்தது […]

வெறுமை

This entry is part 27 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது மதுவும் ஊற்றி மயக்கத்தை உறுதிபடுத்தி வாகன ஊர்வலத்தில் இடைசெருகி மாலை நேர கணக்கு முடித்து கமிஷன் வாங்கி சேயை அதன் தாயிடம் சேர்க்கையில் கண்ணில் நிழலாடியது தன்னை விற்றுப்போன தாயின் முகம் ….. – கவிப்ரியா பானு

பொம்மை ஒன்று பாடமறுத்தது

This entry is part 25 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் நாசியால் முகர்ந்தும் குழந்தைகளை இடுப்பில் தூக்கியும் முத்தம் கொடுத்தும் துப்பாக்கிமுனைகளை துடைத்தும் சுடுவதாய் பாவனை செய்தும் பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை பொம்மைகளின் விளையாட்டில் படைக்கப்பட்ட உலகம் யாருக்கும் வசப்படாதது பார்ப்போருக்கும் கேட்போருக்கும் பொம்மையின் பேச்சு பிடிபடுவதாக இல்லை இடியோசை கேட்டும் மின்னல்களைப் பார்த்தும் பொம்மைகள் பயப்படவில்லை ஏற்கெனவே அறிமுகமான பொம்மை ஜின்களின் தலைகளில் […]

காற்றும் நிலவும்

This entry is part 24 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. கருந்திரை எங்கோ பறந்து போக முகம்மூட ஆடை தேடி மிதந்து சென்று கொண்டிருந்தது நிலா. நிலவுடன் காற்று காதல் விளையாடிக் கொண்டிருக்க… மேகத்தைக் கலைத்து மழையைக் கொண்டு சென்று விட்டதாக காற்றைக் கடுமையாய் திட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர் பலரும்.

நானும் ஸஃபிய்யாவும்

This entry is part 23 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து வரிந்து கட்டிய செண்டாய் என் – வீட்டினர் மத்தியில் கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா அள்ளியணைக்க கொள்ளையாசை! அம்மாவின் கைகளினின்றும் அட்சரம் விலகினாலும் அழுதது ஸஃபிய்யா அப்பனின் முகமும் அலைபாயும் கண்களுமென… எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா நிலா, பொம்மை, பூக்கள், புத்தகம், பூனை, பல்லி எல்லாம் புறக்கனித்து எதையோ… யாரையோ… தேடிய ஸஃபிய்யா சட்டென உதித்தொரு யுக்தி. கைகள் ஏந்தி… கண்கள் பார்த்து… சொன்னேன்…மந்திர வாக்கியமொன்று- தாவி வந்தது ஸஃபிய்யா அள்ளியணைத்து […]