ஆதி

This entry is part 15 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

எதேச்சையாக எதிர்ப்பட்டவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் எங்கெனத் தெரியவில்லை அவரும் கடந்து சென்றுவிட்டார் இனி ஞாபகம் வந்தும் பயனில்லை காற்று அதன் போக்கில் போகிறது மனதை அதைப் போல் கட்டவிழ்த்து விடமுடியுமா இந்த மழை வேறு நேரங்கெட்ட நேரத்திற்கு வந்து தொலைக்கிறது குடையை எங்கே வைத்தேனென்று தெரியவில்லை புத்தகங்களைப் படித்து கண்களை களைப்படையச் செய்தாலும் தூக்கம் வந்தபாடில்லை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறேன் என் உடலை எரிக்கப்போகும் நெருப்பு அவனிடமிருந்து தானே தோன்றியது என்பதாலா.

சிறு கவிதைகள்

This entry is part 14 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது இன்னும் ஒரு பாதி. போய்விடுமோ ப்ரூப் ரீடிங்கிலேயே மீதி வாழ்வு? o 04 வெகு எளிதாக போய்வருகிறான் வெளிநாடுகளுக்கு சக எழுத்தாளன். கடை பாக்கிக்காக கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் கவி சாம்ராட். o

ஒன்றாய் இலவாய்

This entry is part 13 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஆரம்பம் அங்கு இல்லை எனினும் பயணம் அங்குதான் தொடங்கியது போலிருக்கிறது. அரை இரவின் முழு நிலவாய் தயக்க மேகங்கள் தவிர்த்து சம்மதித்த பின்னிருக்கைப் பயணம் முன்னிறுத்திய காதலின் சேதி இருட்டினுள் பொதிந்து வாகனச் சக்கரத்தோடு சுழன்றது. மௌனமே சங்கீதமாய் வழிந்து சன்னமாய் எழுதிக் கொண்ட சித்திரமாய் நீ… முரணாய் அதிர்ந்து கொண்டிருந்த வண்டியின் லயமாய் நான்… எனப் பயணித்த அந்த வேளையின் ஸ்ருதி கலையாது இறங்கும் எல்லையை நீட்டி ஆட்டமும் அதிர்வுகளுமற்ற வாழ்க்கையின் ஒருமித்த பயணத்தின் ஏக்கம் […]

நான்(?)

This entry is part 12 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நானெனவும் யாரெனவும் இருமை நிலையடைகிறது மனம் முயன்று செய்த சாதனைகள் நானெனப் பறைசாற்ற இழந்துவிட்ட சந்தோஷம் யாரெனக் கேட்கத் தூண்டுகிறது. நானென நிலைக்கும் போதில் சுயம் வெளிப்படுகிறது நல்ல ஆதரவும் கிட்டாமல் நாங்கூரமும் இட முடியாமல் நடுக் கடலில் தத்தளிக்கிறது படகு யாரெனக் குழம்பும் பொழுதுகளில் கனத்த அமைதி கவிந்து மனச் சலனங்களை மறக்கடிக்கிறது. எத்தனை மூழ்கியும் முத்தெடுக்க இயலாத வறுமையே வாழ்வாய் வசப்படுகிறது. என்னைப் பற்றிய குழப்பத்திற்கு விடை காணாமலேயே உலகக் குழப்பங்களைத் தீர்க்க முற்படுகிறேன் […]

வாக்குறுதியின் நகல்..

This entry is part 11 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் உள்ளங்கைககள் ஏந்திப் பெற விரும்புவது ஒரு சின்னஞ்சிறிய அறிமுகத்தை மட்டுமே ***** –இளங்கோ

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)

This entry is part 5 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு வலுவைத் தந்து உன் இதயத்துக்கு ஒளியூட்டி உனது ஆத்மாவைக் பள்ளத்திலிருந்து உயர்த்தி மதிப்புப் பீடத்துக்கு ஏற்ற உந்தி இருக்கிறது. அதனால் உன் பங்குப் பணி நிறைவேறியது என்று திருப்தி அடையவும் அவையே உனக்கு அறிவு புகட்டி ஞானத்தைப் பெறவும் ஒரு மரபுரிமை […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

This entry is part 4 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ நேசிப்பது என்னையா ? அல்லது நீ நேசிப்பது உன்னையா ? நிஜத்தைச் சொல் என்னிடம் உண்மை யாக, உறுதி யாக !” +++++++++ ஒருவாய் நீர் அருந்தி ஆடவன் கூறினான் : “என்னிடம் எதுவும் எஞ்சி இருக்க […]

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

This entry is part 3 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

9 குறுங்கவிதைகள்   மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்… **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** மழையும் எப்போதாவது நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது மரக்கிளையைக் கட்டியபடி.. ******************************************* வெய்யில் புள்ளி வைத்து நாள் முழுக்கக் கோலமிட்டபடி இருக்கிறது மரம். ******************************************** விடியலின் பூக்களாய் பூமியின் மீது பூத்துக் கொண்டிருக்கிறது பனி.. ************************************************ சூரியன்காந்தப்பூ ஈர்க்க அதை நோக்கி முகம் மலர்கிறது பூமி.. ****************************************** மஞ்சள் இறக்கைகளோடு பூமியின் மீது பறக்கிறது சூரியன்.. […]

நேய சுவடுகள்

This entry is part 36 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

நேயத்திற்கு மொழி உண்டா, எழுத்து வடிவத்துடன் !! சகதியில் சிக்கிய பசுவின் அலறலும், காப்பாற்றுகிற கைகளினால் சகதி துமிகளின் ‘தப்…திப்பு’ களின் பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக.. கை கொடுக்காத அச்சச்சோக்களும் அய்யையோக்களும் ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல.. காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி சென்ற இயல்பான வழிபோக்கனின் கால்சுவடும்.. அதை ஒட்டியபடி நெடுக தொடர்ந்த பசுவின் கால்சுவடும்.. நேய மொழிக்கான எழுத்து வரிசை வடிவமாய் அரங்கேறியது சகதி படிமத்தில்.. – சித்ரா (k_chithra@yahoo.com)