காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி…… விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்…… அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி ஒரு நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மெட்ரிக்குலேசன் பள்ளி மேடையில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்! ஆங்கிலத்தில் நாடகங்கள் போட்டார்கள்; ஹிந்தி கிளாசிக்குகளைப் பாடினார்கள்; தமிழில் மட்டும் குத்துப் பாட்டுக்கு ஆடினார்கள் எதுவுமே சகிக்கவில்லை….. ஆனாலும் ரசிக்க முடிந்தது […]
ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த ஐயனார் கோயில் மண் குதிரையில் ஆசையோடு அமர்ந்து.. ******************************************** பெண்ணாதிக்கம்.. ***************************** கருவறைக்குள் முடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ., கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய்.. சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவறையிலும்.. தீட்டென்றும் கற்பென்றும் கண் அறியா […]
சிகரெட் பிடிப்பதில்லை மது அருந்தும் பழக்கம் இல்லை பிற கெட்ட பழக்கங்கள் இல்லை – இவன் வேண்டாம் வெள்ளி செவ்வாய் தவறாது கோவிலுக்கு போவான் இறைவழி நடப்பதில் தான் விருப்பம் வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை – இவன் வேண்டாம் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பான் தன்னோடு இருப்பவரை மகிழவைப்பதில் வல்லவன் சிரித்து மயக்கும் கலையில் எம்டன் – இவன் வேண்டாம் உம்மணாமூஞ்சியாய் இருப்பான் தேவையற்ற வார்த்தைகள் பேசமாட்டான் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான் […]
சில சதுரங்கள் கூடி தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க முனைந்தன சில சதுரங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன சில அவற்றை சற்றுத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன ஒரு சதுரம் நாம் எவ்வளவு தான் முயன்றாலும் வட்டத்தை உருவாக்க முடியாது என வாதிட்டது அதனை பல சதுரங்கள் கூடி நையப்புடைத்தன அந்தச்சதுரம் வளைந்து நெளிந்து கோணல்மாணலாகியது அதைப்புறந்தள்ளி விட்டு மற்ற சதுரங்கள் மீண்டும் தம் வேலையைத்துவங்கின எவ்வளவு முயன்றும் அவை தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க இயலவேயில்லை தமது தோல்வியை […]
சமீலா யூசுப் அலி 2011.06.28 முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும் முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள். வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் […]
காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்
கருநிற மேகமொன்று சற்று வெளிறிப் போயிருந்தது அவளது பார்வை கலைந்து போனதில் நிலைத்து மேகத்திரையில் காற்றின் அலைகள் பிய்த்து போட்டன கற்பனைகளை மீண்டும் ஒன்று கூடிற்று கலைந்து போனவை பார்வையின் உஷ்ணம் தாங்காது கோர்த்து வைத்தவை காணாமல் போக கண்ணீர் வடித்தது வானம் , அவள் பார்வையில் பட்டபடி இடியாகவும் மின்னலாகவும் உருமாற்றம் பெற்றன குரோதம் கொப்பளித்த கணங்கள் சலனங்கள் ஏதுமற்று மீண்டும் மீண்டும் வெறித்தபடி பார்த்துக் கொண்டேயிருக்கின்றன அவளிரு விழிகள் ஷம்மி முத்துவேல்
ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக … முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த சிவப்பை போல ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டுமோ ? வெள்ளை போல வெள்ளெந்தியாய் இருந்திருக்க வேண்டுமோ ? நீலம் போல ஆழமாய் இருந்திருக்க வேண்டுமோ ? எல்லாமும் கொஞ்சமாக கலந்து இருந்தது தவறோ ? என்றும் ஓவியன் கையிலெடுக்கும் நிறம் எந்நிறமாக இருக்க கூடுமோ என ஏக்கம் கொண்ட ஊதா, அனுமானங்களை […]
சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில் சூரியன் மட்டும் பறந்து கொண்டிருக்கிறது. சகுனம் பார்த்துச் சென்ற நாயொன்றோ பிறிதொரு நாயைத் தேடி அலைந்தது. காலம் மீறி தன் நிழல்பார்த்து குரைத்தபோது தூரத்தில் இன்னும் நாய்கள் தெரிந்தன. நிழல் உருவம் பெரிதாக இன்னும் […]
பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை தானும் வருவதாகச் சொன்னது. எல்லாச் சொந்தங்களிடமும் ஸ்பரிஷமோ பாஷையோ விடைதர… புன்னகை போர்த்திய முகச் சோகமும் புர்கா மூடிய அகச் சோகமும் கலாச்சார நாகரிக கட்டுக்குள் நிற்க மனைவியின் கண்கள் மட்டுமே முழுப் பெண்ணாகிப் […]