சித்தி – புத்தி

This entry is part 24 of 34 in the series 17 ஜூலை 2011

முச்சந்தி கோபுரத்தின் முகப்பில் சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின் தோள்களில் சாய்ந்திருப்பது போல், ஆறுதலான தோள்கள் எங்கே ? காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது தோள்கள் தென்படாமலேயே .. துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது – பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ? தன்நிறைவான இருப்பில், சித்தியென்ன புத்தியென்ன எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே! பிள்ளையாராக இருக்கவே பிறக்கிறார்கள் சிலர் புரிகிற கணத்தில் பிறக்கிறது வாழ்க்கை  

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

This entry is part 22 of 34 in the series 17 ஜூலை 2011

ஓடுகளாய்.  ஒரு சந்திப்புக்குப் பின்னான நம்பிக்கைகள் பொய்க்காதிருந்திருக்கலாம். தூசு தட்டித் தேடி எடுக்கப்பட்ட கோப்புகளில் இருந்து பெய்யும் எண்ணத் தூறல்களில் நனையாது இருந்து இருக்கலாம். எங்கோ அகதியாய் விட்டு வந்த நிலக்கோப்புகளை பராமரித்துப் பொடியாய் அடுக்காதிருந்திருக்கலாம். பழையனவற்றில் நனைவதும், மூழ்குவதும் தவிர்க்கயியலா போதுகளில் திசைவிட்டு திசை நகர்ந்து குடியிருப்பை அமைக்கும் சிலந்தியை காணுவதும் தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம். இதுதான் என தீர்மானித்தபின் உயிர்வாழ்வதும் மரணிப்பதும் ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட ஓடுகளாய் சரியும்வரை. வேர் பாய முடியாத செடிகள்..:- ********************************************** நெருப்புப்பொறி பறக்க […]

அன்னையே…!

This entry is part 21 of 34 in the series 17 ஜூலை 2011

உயரமான ஒரு சொல்லை எழுதினேன் அது – “சிகரமா”னது… நீளமான சொல்லை வரைந்தேன் – உடனே “நதி”யானது… வெப்பமான சொல்லொன்று எழுத “சூரியனா”ய் உதித்தது… ஈரமான சொல்லொன்று எழுத “மழை” பொழிந்தது… அன்பாக ஒரு சொல் எழுத “நீ”யானாய்… நீ உடன் வந்தாய் – இனியும் நான் யாதெழுத…? என் முன் நீ அன்பொழுக…! இனி நீயே கதையெழுது… வாழ்க்கை நதியோட….!

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

This entry is part 19 of 34 in the series 17 ஜூலை 2011

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக நகரங்களை உருவாக்குபவன் என்வீதிவழியே வந்து என்னை தட்டி எழுப்பிச் சென்றான். கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து இரவின் கதையை எழுத பிறையின் ஒளியை முத்தமிட்டு அதிசயித்து பார்க்கும் கண்கள் மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது. தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர அவன் கூக்குரலிட்டான். நிரம்பிய கண்ணீரில் ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும் நெடுவெளி மணற்காட்டில் தய்யம் செய்யும் விரல்களும் அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில் அவனின் அபயக்குரல் தொடர்ந்தது. லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும் உடைபட்டு […]

உருமாறும் கனவுகள்…

This entry is part 18 of 34 in the series 17 ஜூலை 2011

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு ம‌ருந்து வைத்திய‌ர் சுழ‌லாத‌ உட‌ல் உபாதையென‌ ஒற்றைக்க‌வலை‌. க‌ட‌வுள்… வ‌ர‌ம்… வேண்டுத‌ல்…எல்லாமே நான்… நீ… நம்பிக்கை… மறுதலிப்பு!!! ஹேமா(சுவிஸ்)

காத்திருக்கிறேன்

This entry is part 15 of 34 in the series 17 ஜூலை 2011

என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை தடவிப் பார்க்கவும்., தொலைந்துபோன நட்பின் சிறகுகளை தேடிப் பார்க்கவும் வாழ்க்கை வானில் கவிழ்ந்த சோக இருளைத் துடைக்க மனப்பகிர்வு மின்னலை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன் காலம் காட்டிய திசையில் காற்றெனப் பறந்த உங்களின் […]

முற்றுபெறாத கவிதை

This entry is part 13 of 34 in the series 17 ஜூலை 2011

இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல விரித்து ஆச்சர்ய குறி ஒன்று இடைசொருகப்படுகிறது ..! ஏதும் சொல்லொண்ணா நேரங்களில் வெறும் கோடுகளாய் நீள்கிறது……. புலம்பியது போதும் என முற்றுபுள்ளி வைத்தேன் ! அதன் அருகிலேயே மேலும் சில புள்ளிகள் இட்டு காலம் […]

கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?   எனினும் நாளையும் வரும் என்ற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்துவதைத்தவிர. அது வேறொன்றும் செய்வதில்லை.   மேலும் அது ஒரு இறகையும் உதிர்த்துச்செல்வதில்லை எனக்கென.   சின்னப்பயல் – chinnappayal@gmail.com

அழுகையின் உருவகத்தில்..!

This entry is part 9 of 34 in the series 17 ஜூலை 2011

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது. *மணவை அமீன்*  

ப மதியழகன் கவிதைகள்

This entry is part 8 of 34 in the series 17 ஜூலை 2011

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால் கன்னத்தில் முத்தம் பதிக்கும் யாரையும் சீரியல் பார்க்கவிடாமல் கார்ட்டூன் சேனல்களில் லயித்துப் போய் தொலைக்காட்சி முன்னால் தவமிருக்கும் அழைப்பு மணி ஒலிக்கும் கணத்தில் தொலைபேசி அதன் கையிலிருக்கும் மழலை மொழியில் ஹலோ என்பதை வீடே […]