ஆட்டுவிக்கும் மனம்

This entry is part 30 of 51 in the series 3 ஜூலை 2011

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு  மறுக்குது இன்பங்கள்  கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில்  மறைந்த பெண்ணை இருபது வயதில்   வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க  வழிதெரியாமல் திண்டாடும்  மன ஆடுகள் திண்டாட்டம் கடை நாளில்தான் தீருமென தெரிந்தும் வயற்றில்  உள்ள கனத்தை நினைவில் அசை போடும் ஆட்டு விக்கும் மனம்     ve.pitchumani

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

This entry is part 27 of 51 in the series 3 ஜூலை 2011

திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம்   அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும் தயை காட்டும் அம்மா    

கடன் அன்பை வளர்க்கும்

This entry is part 25 of 51 in the series 3 ஜூலை 2011

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க சில்லறை இல்லாத போது தன் குட்டிப் பையைக் குலுக்கித்தேடி  எடுத்துத்தந்த இரு ஐந்து ரூபாய் நாணயங்களை நினைவூட்டி. *** -ராமலக்ஷ்மி

சிறுகவிதைகள்

This entry is part 24 of 51 in the series 3 ஜூலை 2011

நள்ளிரவில் கனவு வந்தது சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடருமென்றது. எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை. தெரிந்த பிறகும் நிகழந்தது அது. ஆடிய தாண்டவம் ஒய்ந்து பாதங்கள் சிவக்க,வலிக்க நடனத்திலிருந்து நடைக்கு மாறுகிறார் நட ராசர். ரவி உதயன்

சாபங்களைச் சுமப்பவன்

This entry is part 23 of 51 in the series 3 ஜூலை 2011

  நேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று   பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வையோடு தான் துயருறுவதாகச் சொன்ன போதும் பொய்யெனத் தோன்றவில்லை ஏமாறியவளுக்கு இருள் வனத்திலொரு ஒளியென அவனைக் கண்டாள்   புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன அவனது கைகள் ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்   அவளது கைகளைப் பிணைத்திருந்தது அவனிட்ட மாயச் சங்கிலி விலங்கிடப்பட்ட பறவையென காலடியில் வீழ்ந்துகிடந்தாள் […]

தன் இயக்கங்களின் வரவேற்பு

This entry is part 22 of 51 in the series 3 ஜூலை 2011

இயற்றப்படும் இந்த பிரபஞ்ச நிகழ்வில் நீங்களும் ஒரு இயக்கம்  . இப்பொழுதே இதுவரையிலும் இல்லாத தன் விடுதலை உணர்வை தேடுவதை போல இதில் இருந்து விலகி ஓட ஆயுத்தமாகுகிறிர்கள். இதுவும் கூட அந்த இயக்கத்தின் சார்பானது என அறியாமலே அறியாமையில் மிதங்குகிறிர்கள். தற்சமயம் உங்களின் அனுமதி இல்லாமல் இதில் எதுவுமே திணிக்கப்படவில்லை. இதன் பொருளும் உணர்வும் இன்னுமும் முக்கியமாக்கவில்லை உங்கள் எண்ணங்களின் மீது வீற்றிருக்கும் அமைவு உங்களை பரிசோதிக்க காத்திருக்கிறது . அதன் கேள்விகளும் பதில்களும் நிறைவு தன்மை அற்றவையாக […]

வினாடி இன்பம்

This entry is part 21 of 51 in the series 3 ஜூலை 2011

  மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம் முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம் அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை சிக்னலில் நின்றது வாகனங்கள் குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன் குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள் முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது நான் வாசித்ததிலேயே இன்றளவும் சிறந்த கவிதை அது தான்    

பருவமெய்திய பின்

This entry is part 20 of 51 in the series 3 ஜூலை 2011

பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை — மன்னார் அமுதன்

கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்

This entry is part 14 of 51 in the series 3 ஜூலை 2011

  1. வீதியில் குழந்தைகள் விளையா  டும் சப்தம் ஒழுங்கற்று. இரண்டு மாதமாகக் பள்ளிவிடுமுறை நிச்சயக்கபட்டாத பாடத்திட்டம். புத்தகங்கள் வாங்கும், பைண்டிங் செய்யும் வேலைகள் இல்லை. திறப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதிறப்பு நாள் பற்றி பல யூகங்கள். துவைத்து காயப்போட்ட புத்தகப் பைகள் சிரித்தபடி கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.   2.   கலகலப்பாக இருந்தது  வீடு. விடுமுறையில் எத்தனையோத் திட்டங்கள் எத்தனையோ வேலைகள் . கூட யாராவது இருந்தபோது ஆறுதலாக இருந்த்து. மகள் இருந்தது இன்னும் […]

ஆன்மாவின் உடைகள்..:_

This entry is part 11 of 51 in the series 3 ஜூலை 2011

வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..