“நடிகர் சிகரம் விக்ரம்”

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம் இவ‌ர் ந‌டிப்பின் விய‌ப்பில் வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து. விருதுக‌ளின் முக‌ங்க‌ள் அச‌டு வ‌ழிந்த‌ன‌. இவ‌ருக்கு விருது த‌ர‌ என்ன‌ இருக்கிற‌து இங்கு? ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும் இந்திப்ப‌ட‌மும் ("பார்") வ‌ந்து விட்ட‌ போதும் அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌ அச‌த்திய‌ போதும் எல்லாருமே…

கூறியிருக்கவில்லை

இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என்…

சுவீகாரம்

இரட்டைப்புள்ளிக் கோலங்களாய் ஆரம்பிக்கிறது., ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை. குழந்தைப் புள்ளிகளைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் ஊரளவு. பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய் புள்ளிகள் விரிகின்றன. எள்ளுப் பேரன்களின் வீரியக் குறைச்சலால்., எள் தெளித்தபடி வர.. சோற்றைத் தேடும் காக்கைகளாகின்றனர் முன்னோர்கள். அள்ளிச்சிதறிய…

நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள். மனதில் அவர் அருந்தியதும் நிரம்பிய ரத்தச் சகதியில் அழுந்தத் தயாராகுங்கள். ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள். உங்கள் உரையாடல் ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது. ஓட ஓட அழுக்கடைகிறீர்கள். உணவுச் சத்துக் கொடுத்து உப்புச் சக்கையைப் பிரித்து…

அந்தப் பாடம்

பூவைப் பறிக்கிறோம், செடி புன்னகைக்கிறது மறுநாளும்.. காயைக் கனியைக் கவர்கிறோம், கவலைப்படவில்லை காய்க்கிறது மறுபடியும்.. கிளைகளை ஒடிக்கிறோம், தளைக்கிறது திரும்பவும்.. தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை- ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை.. அட மரத்தையே வெட்டுகிறோம், மறுபடியும் துளிர்க்கிறதே ! மீண்டும் வெட்டாதே .. மனிதனே, உனக்கு…

புதிய பழமை

எதுவும் புதிதல்ல. சூ¡¢யன் சொடுக்கும் காலச் சுழற்சியில் பழையன எல்லாம் புதிதாய்த் திரும்பும். பெருவெளியில் பொதிந்த வேதமும் நாதமும் கழிக்க முடியாத பழையன தானே! கழிதல் என்பது கணிதத்தின் சாயல். காலக் கணக்கில் மனிதன் கழிவதும் மனிதக் கணக்கில் காலம் கழிவதும்…

சிறகின்றி பற

கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே…

அறிதுயில்..

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும் இனிப்புடன் வரமறந்த தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை ஒரு கண்ணிலும்; .. உடன் விளையாட வரமறுத்த அன்னையின் மீதான இன்றைய கோபத்தை இன்னொரு கண்ணிலும் சுமந்துகொண்டு; கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்.. என்னுடைய எல்லா சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது…. உன்னுடைய செல்லக்கோப…

மழையைச் சுகித்தல்!

நள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி! வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது! இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி…

கரைகிறேன்

கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்