’ரிஷி’யின் கவிதைகள்:

This entry is part 41 of 43 in the series 29 மே 2011

1.மச்சம்   இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம்  புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி   தச்சன் கை உளி செதுக்குவதும் பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும் அன்னதானங்களால் ஆகாதவாறு ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய காதலே போல் அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக. 3.உயிர் வெல்லம்; அல்ல- வெண்கலம்; இன்னும்- வெங்காயம்; […]

வழக்குரை மன்றம்

This entry is part 39 of 43 in the series 29 மே 2011

‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள் சிவந்தன கூந்தல் அவிழ்ந்து’காற்றில் அலைந்தது முகத்தினில் ரௌத்திரம் தாண்டவம் […]

மீன்பிடி கொக்குகள்..

This entry is part 37 of 43 in the series 29 மே 2011

* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும் உன் கைத் தூண்டில் முனையில் ஒரு எழுத்து நெளிகிறதே மீன் பிடிக்கவா..? தூ..! கொக்கை விரட்டு கொக்கை விரட்டு..

உறையூர் தேவதைகள்.

This entry is part 34 of 43 in the series 29 மே 2011

தினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன் மெய்மறப்பது என்பது இதுதானோ., அவள் அருகில் இருப்பதாக பெறப்படும் கற்பனையே அன்றி இது வேறு என்னவாக இருக்ககூடும். இருப்பினும் பார்வைகள் அடிக்கடி அவளை நோக்கியே செல்லும் இது விசித்திரமான நோயாக இருக்க கூடாதென்பதற்காகவே  […]

பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்

This entry is part 31 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல்   இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப் படரும் நல்லமிளகு கொடிகள் துயரத்தின் வாசத்தை காற்றில் மிதக்கவிடுகின்றன. அதிகாலைப் பனியில் உதிர்ந்த ஒரு கொத்து கறுப்பு பூக்கள் பூமியின் இதழ்வருடி வலிபட முனங்குகின்றன. பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம் மெல்லத் தெரியத் துவங்கி ஒரு கனவாக உதிர்ந்திருந்தது. […]

பாதைகளை விழுங்கும் குழி

This entry is part 29 of 43 in the series 29 மே 2011

* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும்   தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும்   பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க   இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * ***   கலாசுரன்  

காஷ்மீர் பையன்

This entry is part 28 of 43 in the series 29 மே 2011

அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி.   தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில் பாம்புகளிடையே எப்போதும் உருண்டு கொண்டிருப்பான். “எனக்கும் ஒரு நாள் தாடி வளருமா?” “பரமபத விளையாட்டில் காய்கள் பிழைப்பது பகடைக் காய்கள் […]

ஏதுமற்றுக் கரைதல்

This entry is part 26 of 43 in the series 29 மே 2011

நான் நடக்கின்ற பாதை   எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளைஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது. ஓலச்சுவர்களின் வெறுமையில் நாக்கறுந்த பல்லியொன்றினசைவு எதுவுமற்றுக் கரைந்துபோகிறது. நினைவுப்பாலையாகிவிட்ட இந்த நிலத்திலிருந்து காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த என்னைப்பார்க்கிறேன்.இருட்கட்டைகளினீரம் எங்கும்டரஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.   –ந.மயூரரூபன்  

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

This entry is part 20 of 43 in the series 29 மே 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎழுதும் இந்த எழுத்தாணியை    எடுக்காது செம்மறி ஆடு ! பிரிக்கும் இடைவெளிப் பேதங்கள் இல்லை நமக்குள்ளே ! காதலின் புனித பீடம் இது ! கண்களைக் கசக்கி காதலைக் காதலோடு நோக்கு மீண்டும் !   ++++++++++++   “வாசலில் யாரெனக் கேட்டாய்” “உனது அன்புத் தாசன்” என்றேன் நான் ! “எதற்கு வந்தாய் ?” என்று நீ கேட்டாய். “வழிபட்டு உன் […]

பிறப்பிடம்

This entry is part 19 of 43 in the series 29 மே 2011

வெள்ளையர் வேட்டி சேலையிலும் நம்மவர் ஜீன்சிலுமாய் நீறு மணமும் மக்களின் வேண்டுதல்களும் கமழும் நம் ஊர் கோவில்..   ஊர்களின் பெயர்களும் விற்கப்படும் பொருட்களும் ஒலித்துக்கொண்டிருக்கும் முகம் தெரியா மக்கள் நிறை பேருந்து நிறுத்தம்..   அதிகபட்ச அலங்கோலத்தில் வீசப்பட்ட புத்தகங்கள், துவைத்த துவைக்காத துணிகளின் அணிவகுப்பு கொண்ட விடுதி அறை..   என்று எங்கும் பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்.. என் கண்கள் நோக்கும் உன் கண்கள் பார்க்கும் போது மட்டும் மௌனமே தவழ்கிறது சுற்றிலும்.. பேச […]