ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை..
ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக் கவனிக்க ஏலாமல் யார் யாரின் அந்தப்புரத்துள்ளோ அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் ராஜாக்கள். சிரச்சேதம் செய்யப்படலாம்.. சேதமுற்றே திரிவோர்க்கு சிரச்சேதம் பெரிதா என்ன.. ராஜாக்கள் கூஜாக்களாய் பின் கோமாளிகளாய்..
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : “நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?” நீ சொல்வாய் : “நான் அறிவேன். அதனில் நான் மட்டு மில்லை. மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன் பற்றி யுள்ளன என்னை ?” நான் உரைத்தேன் : உனது பிரதி பலிப்புகள் அவை எல்லாம் ! ஒருவரை ஒருவர் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++இசை ஆத்மாவின் நாதம்+++++++++++ என்னிதயம் கவர்ந்த வனிதை அருகே அமர்ந்து […]
* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும் இளமையென கை விடப்பட்ட சந்தர்ப்பங்கள்.. ***** –இளங்கோ
ஒரு பறவையின் நீலச் சிறகு … இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை … அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் … தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் … கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு ….. பூட்டிய வீட்டின் முன் விட்டெறிந்த கடிதம் … மற்றும் என் வருகைக்காக காத்து பதுங்கி முகம் புதைத்திருக்கும் கருப்பு நிற நாய்… இவைகள் ., இவைகள் மட்டும்தான் இன்று எனக்கு சொந்தமானவை ….! […]
பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?! – இலெ.அ. விஜயபாரதி
ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க எண்டார்ஃபின்கள் தடை பிறழ்ந்த உற்பத்தி.. டெசிபல்களும் பிக்சல்களும் மாயக்கண்ணாடிப் பிம்பம் விளைத்த க்ளோனிங்குகள்.. சடை விழுது பின்னிய சாரையும் சர்ப்பமும்.. காலற்ற பைசாசங்கள் சுற்றிய நஞ்சுக் கொடி..
நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள் வன்முறையை எதிர்க்கும் திரைப்படத்தில் அரிவாள் தான் கதாநாயகன் பறவைகளின் எச்சத்தில் தான் அந்தக் காடுகளில் விருட்சங்கள் முளைத்தன உடலில் நிழல் போலல்லாமல் மனதின் நிழல் மண்ணில் விழுந்தால் நீங்கள் என்ன விலங்கென்ற புதிர் அவிழ்ந்துவிடும். […]