01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய்…
கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என…
நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு குப்புசாமிக்கும் ... மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக்…
(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார். அல்லோகலப்பட்டது புழுதிக்காடு. செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர்…
பிரக்ஞையற்று திரிந்தலைந்த கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்.... காலாதி காலங்களாய் தொடர்ந்த மெளனம் களைந்தெறிந்து ஊழியின் உருவமாய் மெய் சிவந்து…
ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்... இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப்…
விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள்…
சருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள்…
கண்தொட்டவரையில் நீண்டுகிடக்கும் இந்த இரவின் பாலத்தில் நத்தையின் முதுகேறி ஊர்கின்றன நிமிடங்கள் தண்டவாளங்களை வெறிக்கிறது பூமிதின்ற நிலவு கிளையசைவிற்கு எந்த வாகனமும் நிற்கவில்லை ஒலியோடு ஒளிவெள்ளமென சகலமும் வழிந்தோடுகிறது ஒரு பெரும்பள்ளத்தில் சாம்பல் சிறகுகள்…
என்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது. செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல் திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார். எனது துரித நீந்துதலை…