இந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.) நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள். 1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது. 2.பாரதியார் புதுச்சேரிக்குப் போனதால் அவர் கோழை என்று சிலரால் முன்னிறுத்தப் படும் வாதம் பொய் என்று காட்டியது. 3.பாரதியாரின் […]
எஸ். ஆல்பர்ட் கீற்றுக்கூரை பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு வெறிநாய் ஒரு நொடியில் தூர்ந்த ஒலியாக நிசப்தம் குலைய , தொடர்ந்தன ஓன்று பலவாக பற்றிப் படரும் தீயாக வேலையற்ற நாய்கள், விழித்திருக்கும் வீட்டு நாய்கள், உறங்கமுடியாச் சொறிநாய்கள், வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு பேதம் கெட்டுச் சேர்ந்து குரைக்கக் குரைக்க, சத்த பிரம்மமாக ஊர் நாசமானது. இரவு கெட்டது. மஞ்ச மாளிகை மஞ்சமும் நாற்காலியும் ஆளின்றி அதிர்ந்தன. “சனியன்கள் […]